உலக செவிலியர் நாள் (International Nurses Day) கட்டுரை:- செவிலியர் (Nurse) - மனிதத்தின் முகவரி | அ.சீனிவாசன் (A.Srinivasan)

உலக செவிலியர் நாள் (International Nurses Day) கட்டுரை:- செவிலியர் – மனிதத்தின் முகவரி | அ.சீனிவாசன்

மே 12 – உலக செவிலியர் நாள் சிறப்பு கட்டுரை

நர்ஸா???

செவிலியர்: மனிதத்தின் முகவரி

செவிலியர்கள் – மருத்துவ உலகின் முதுகெலும்பு, மனிதத்தின் நிஜ முகம்.
ஒரு குழந்தையின் முதல் அழுகையை வரவேற்கும் தாயாகவும்,
ஒரு நோயாளியின் கடைசி மூச்சுக்குத் துணையாக நிற்கும் மகளாகவும்,
அவர்கள் திகழ்கிறார்கள்.

சுகப்பிரசவமாக இருந்தாலும், சோகமில்லா இறப்பாக இருந்தாலும்,
அவர்களின் கரங்கள் வாழ்வையும் மரணத்தையும் மென்மையாகத் தொட்டுச் செல்கின்றன.
மருந்துகளோடு மனிதத்தைச் சேர்த்து வழங்கும் இவர்கள்,
மருத்துவத்திற்கும் மனிதநேயத்திற்கும் இடைப்பட்ட பாலமாக விளங்குகிறார்கள்.

சேவையின் மணம்

மருந்தகக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், உடல்கழிவுகள் –
இவை எதுவும் செவிலியரின் சேவையை மங்கச் செய்ய முடியாது.
இந்தக் குழப்பங்களின் மத்தியில் கூட,
அவர்களின் சேவையின் மணம் சுத்தமாய் வீசுகிறது.

மருத்துவரின் குரலுக்கும், உறவினரின் அழைப்புக்கும்,
மௌனமாயிருக்கும் நோயாளியின் உள்ளக் குரலுக்கும் –
அவர்கள் செவிமடுக்கும் பரிசுத்த பண்பால்,
இவர்கள் ‘செவி’லியர் என அழைக்கப்படுகிறார்கள்.
மருத்துவ உடலமைப்பின் உயிர்த்த தாதுக்களாக,
அவர்கள் ‘தாதி’யாக வாழ்கிறார்கள்.

மௌனத்தின் மொழிபெயர்ப்பாளர்கள்

பேச முடியாத நோயாளியின் வலி,
அவர்களின் மௌனத்தில் ஒளிந்திருக்கும் வேண்டுகோள் –
அவற்றைச் செவிலியர் நுட்பமாக உணர்கிறார்கள்.

கேட்க முடியாத நோயாளிக்கு,
அவர்கள் மொழியாக மாறுகிறார்கள்.

யாரும் விளிக்காத முன்பே, யாரும் வலிக்காத முன்பே,
அவர்கள் சேவையில் முன்னே நிற்கிறார்கள்.
அந்த அர்ப்பணிப்பு, உரக்க ஒலிக்காத,
ஆனால் நெஞ்சில் நின்றுகொள்ளும் ஒரு அமைதிக் குரல்.

கேட்கப்படாத குரல்

அனைவரையும் கேட்கும் இந்த செவிலியர்களின் குரல்,
பெரும்பாலும் மற்றவர்களின் செவியில் விழுவதில்லை.

‘நர்ஸ்’ என்ற சொல், சில சமயங்களில் இழிவோடு உச்சரிக்கப்படலாம்,
ஆனால் அவர்களின் சேவையின் மாண்பு எப்போதும் உயர்ந்தே நிற்கிறது.

திரையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும்
‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற உறுதியுடன்
அவர்கள் நெடுந்தொலை பயணிக்கிறார்கள்.

எத்தனை விமர்சனங்களும், அவமதிப்புகளும் வந்தாலும்,
அவர்கள் நம்பிக்கையை நசுக்க முடியாது.

International Nurses Day: 'எங்கள் செவிலியர்; நமது எதிர்காலம்' உலக செவிலியர்  தினம் இன்று

சகோதரிகள், தோழிகள்

அவர்கள் நம் சகோதரிகள், நம் தோழிகள்.
மருத்துவமனையின் இயந்திர சூழலில்,
மனிதத்தின் முகத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

அன்பு, பொறுமை, அர்ப்பணிப்பு ஆகியவை இல்லாமல்,
மருத்துவம் வெறும் மெக்கானிக்கல் இயக்கமேயாகி விடும்.

செயற்கை நுண்ணறிவும் மனிதத்தன்மையும்

தொலைபரிசோதனைகள், ஆல்கொரிதங்கள், செயற்கை நுண்ணறிவு –
இவை மருத்துவத்தை வேகமாக மாற்றுகின்றன.

ஆனால் ஒரு நோயாளியின் கண்ணீரை துடைக்கும் கரம்,
அவர்களுக்காக காத்திருக்கும் நெஞ்சம்,
அன்புடனும் அழுத்தமுடனும் கேட்டுத் தேற்றும் குரல் –
இவை எந்தக் கணினியும் மறுபடியும் உருவாக்க இயலாதவை.

செவிலியர்களின் சேவை, மனிதத்தின் நரம்புகளைத் தொட்டுச் செல்கிறது.
அது தொழில்நுட்பத்தால் முடிவுறாத ஓர் உந்துசக்தி.

செவிலியர் தின வாழ்த்துகள்

இந்த சர்வதேச செவிலியர் தினத்தில்,
இந்த மாண்புமிகு சேவையாளர்களுக்கு
நாம் நன்றியும், மரியாதையும் தெரிவித்துக் கொள்வோம்.

அவர்கள் வழங்குவது மருந்துமட்டுமல்ல – மனிதம்.
அவர்கள் கைகளில் உயிரின் வெப்பமும்,
உணர்வின் ஆழமும் பழகியிருக்கின்றன.
செவிலியர்களே, உங்கள் சேவைக்கு உலகம் என்றும் நன்றியுடன் இருக்கும்!

கட்டுரையாளர்:

அ.சீனிவாசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *