ஒன்றைச் சொல்கிறது
ஓய்வென்பதையே
அறியவில்லை நீயென..
தோழி அழைத்தாள்
அலைபேசியில்
இரவென்றால் அங்கு…
காலை என்றேன் இங்கு…
ஒரே நீ
இருவருக்கும்
வெவ்வேறாய் …
நீ எனக்கு
மகிழ்ச்சியான நிமிடங்களைத்
தருகிறாய்…
என் தோழியை
வருத்தமான நிமிடங்களில்
இருத்துகிறாய்…
நான் மட்டுமே கூட
என் வாழ்வில்
பலவிதமான
நிமிடங்களைக் கடக்கிறேன்
மகிழ்ச்சியும், வருத்தமும்
கோபமும், பயமும் என
மாறி மாறி
எனது நிமிடங்கள்…
ஐந்து பருவங்களால்
மாற்றங்களே மாறாததென உணர்த்துகிறாய்…
தேங்காமல்
ஓடுகிறாய்…
உன்னில் உறைந்த
எனது அழகிய நினைவுகளை
மீட்டெடுக்கிறாய்…
நொடிகளாய்…
நிமிடங்களாய்…
மணிகளாய்…
கடந்துபோகும்
உன்னோடு
எனது வாழ்வும்
கடக்கிறது…
நான் உன்னை கடக்கிறேனா
நீ என்னை கடக்கிறாயா?
உன்னைச்
சரியாய்க் கையாள
அழகிய வெளியில்
அமர்த்துகிறாய்…
அழகிய வெளியை
கவனமாய்க் கையாள
அது உன்னில் கொண்டு
நிலை நிறுத்துகிறது…
இப்படியாய்
நமது பயணம்
அழகிய காலமே…
சு. இளவரசி,
சிவகங்கை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்