Subscribe

Thamizhbooks ad

இப்பலாம் யாருங்க… சாதி பாக்குறா….? கவிதை – ஆதிரை




நாயர் கடை டீயில் தொடங்கி
செட்டியார் கடை
மளிகையோடு
நாடார் கடையில்
காய்கறி வாங்கி
வீட்டிற்குச் சென்றேன்!

வாசலில் கிடந்த
நாளிதழைப் புரட்ட
ராமசாமி படையாச்சி
மரண அறிவிப்பும்
சிதம்பரம் பிள்ளையின்
நினைவஞ்சலியும் நிரம்பிய பக்கங்களைப்
புரட்டினேன்!

சாதிச் சண்டையில்
மண்டை உடைந்தவர்களின்
மருத்துவமனைப் படங்களைக் கடந்தால்…

புதிதாகத் தொடங்கும்
சாதிக்கட்சி மாநாட்டு
விளம்பரம்
பல்லை இளிக்க…
ஒவ்வொரு சாதிக்கும்
வரன் தேடி அலைகிறது
இரண்டு பக்கங்கள்!

நாலாய் மடித்து
மேசையில் வைத்துவிட்டு
ரிமோட்டை எடுத்து
டீவியைப் போட்டேன்!

தமிழ்சாதி டாட் காம்
விளம்பரம் ஓட
வேறு சேனலை மாற்றினேன்!
தேவர் காலடி மண்ணே…என்று
சிவாஜி கரகரக்க
எழுந்து போய் பல்துலக்கி துப்பிவிட்டு
குளித்து முடித்து
அலுவலகம் புறப்பட்டேன்!

எதிரே வந்து நின்ற
மனைவி சொன்னாள்
மறக்காம….
செட்டிநாட்சிக்கன்
வாங்கிட்டு வாங்க!

வீட்டிலிருந்து வெளிய்யே வந்து
பைக்கை உதைத்துப்
புறப்பட்டேன்….
ரெட்டியார் சாவடியில்
உள்ள என் அலுவலகத்திற்கு!

என்ன ஓய்… என்று
சுப்ரமணிய ஐயர் கேட்க
டிராபிக் சார்னு சமாளிச்சிட்டு சிஸ்டத்தில் அமர….
புராஜக்ட் ஃபைலை
நீட்டினார் சுதாகர்ரெட்டி!

புராஜக்ட் மேனேஜர்
சிஸ்டம் சரியில்ல….
அதெல்லாம் வேற கதை!

மடமடவென பணிகளை முடிக்க……
மதிய உணவிற்கு நண்பர்கள் அழைக்க
கீழிருந்த முதலியார்மெஸ்ஸில்
சாப்பிட்டு முடித்தேன்
வழியில்லாமல்!

மீண்டும் விட்டபணி தொடர…..
ஜனனி ஐயரின் பாடல்
ஒலித்தபடி பக்கத்து சீட்டில் போன் அடிக்க
ஆபிஸ் டைம் முடிந்தது
ஒரு வழியாக!

மீண்டும்…..
பைக்கை உதைத்து
வண்டியைக் கிளப்ப…..
சீறிப்பாய்ந்து சென்றது
நாயுடு ஹாலைக் கடந்து..!

திடீரென வேகம்
செட்டிநாடு ஹோட்டல்
அருகே குறைய…..
தன்னையறியாமலேயே
பிரேக் போட்டது…
மனைவியின் ஞாபகம்!

ஒரு செட்டிநாட் சிக்கன் கிரேவி பார்சலோடு
நகர்ந்து….,
செங்குந்தர் பள்ளி வழியே செல்லும்போது….!

சாதிகள் இல்லையடி பாப்பா …. என்ற
வாசகத்தோடு பாரதி
முறைப்பதைப் பார்த்து
ஒரு நமட்டுச் சிரிப்போடு
சென்றேன்!

அம்பேத்கர் சிலையொன்று கைநீட்ட
நீட்டிய திசை சென்றேன்
பெரியார் நகர் வந்தது!
உறக்கம் கலைந்தது!

படுக்கையிலிருந்து
எழுந்தேன்….சமத்துவ
சமூகநீதி பாதையிலே
நடந்தேன்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

1 COMMENT

  1. நடைமுறைக்கேற்ப ஒரு நல்ல கவிதை❤️
    வாழ்த்துக்கள் சொல்லாமல் இருக்க முடியவில்லை அண்ணா எனது வாழ்த்துக்கள் 💥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here