Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம் : மாதவராஜின் இரண்டாம் இதயம் – ஆன்டோ கோல்பர்ட்




நூல் : இரண்டாம் இதயம்
ஆசிரியர் : மாதவராஜ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 150.00
தொடர்பு எண் ; 044 24332924

புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

நம் தோளில் கைக்போட்டபடி உரையாடுவதைப் போன்ற ஒரு நடையில் தன் ‘இரண்டாம் இதயம்’ நூலை எழுதியுள்ளார் எழுத்தாளரும் என் அன்பு அண்ணனுமான ஜா.மாதவராஜ் அவர்கள். பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

எப்போதும் அவரது எழுத்து நடை தனித்துவமானது. வாசக மனங்களுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து சொற்களைக் கோர்ப்பதில் வல்லவர். இந்த நூல் அவரது
”தீராத பக்கங்கள்” என்னும் வலைப்பூவில் அவர் எழுதிய பதிவுகளின் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பாகும்.

தான் வாழ்வில் எதிர்கொண்ட சுவையான சம்பவங்கள், சுவாரஸ்யமான மனிதர்கள், தன் படைப்புலக அனுபவங்கள், இழப்புகள், நெகிழ்வான தருணங்கள், மறுக்க முடியாத நினைவுகள் என பலவற்றின் சுவாரஸ்யமான தொகுப்பு தான் இந்நூல்.

அவரே எழுத்தாளராகவும், தொழிற்சங்க வாதியாகவும், ஆவணப்பட இயக்குநராகவும், பேச்சாளராகவும், முற்போக்கு சிந்தனை கொண்ட களப்பணியாளராகவும் இருப்பதால் ஒரு சாமான்ய மனிதனின் வாழ்வைக் காட்டிலும் அதிக மனிதர்களோடு பழகியவராகவும், சமூகத்தின் அறியப்பட்ட ஆளுமைகளோடு நெருங்கிப் பழகியவராகவும், எதையும் ஒரு கலைப்பார்வையோடு பார்க்கும் பழக்கமுடையவராகவும் இருப்பதால் இந்நூலில் அவர் எழுதும் பல சம்பவங்கள் வெறும் வாழ்வியல் அனுபவங்களாக மட்டும் இல்லாமல் நமக்கு புதிய சுவையான தகவல்களாகவும் இருக்கிறது.

டெஸ்டிமோனா, சண்முகவள்ளியக்கா, அழியாத கோலங்கள், டார்க் ரூம் போன்ற பல பதிவுகள் ஒரு சிறுகதைக்கானது. அவர் தன் நினைவுகளை மீட்கும் போது நமக்கு அது காட்சியாகிறது. இந்த நூலின் மற்றொரு சிறப்பான அம்சம் தன் அனுபவங்களை எந்தவித போதனைகளும் இன்றி மிக இயல்பாக நம் முன் விவரிக்கிறார். எங்கேயும் அவர் எதற்கும் எத்தீர்வையும் முன்வைத்து ஒரு தனித்த உரையாடலை நிகழ்த்தவில்லை!

எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுசாமி, உதயசங்கர், கோணங்கி, எஸ்.ரா போன்ற பலரோடு அவர் பயணித்த அனுபவங்களைச் சுவாரஸ்யமாகப் பதிவு செய்கிறார்.

அதிலும் குறிப்பாகத் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமையான எழுத்தாளர். ஜெயகாந்தனின் மூத்த மருமகன் என்பதால் அவர் தன் காதல் அனுபவங்களைக் கோர்த்த விதமாகட்டும் அதன் தொடர்ச்சியாக அவருக்கும், ஜெயகாந்தனுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் ஆகட்டும், பின்னர் அவர் ஜெயகாந்தனுக்கு எழுதிய கடிதத்தின் சாரமாகட்டும் இவைகளை அவர் விவரிக்கும் போது அது அத்தனை சுவாரஸ்யமாக வாசக மனதிற்குக் கடத்தப்படுகிறது.

இந்த நூலில் பல ஊர்களை அவர் குறிப்பிட்டு எழுதினாலும் சென்னையும், சாத்தூரும் தவிர்க்கவே முடியாத கதாபாத்திரங்களாக நூலெங்கும் உலா வருகிறது. தன் பால்ய கால அனுபவங்களில் துவங்கி ஒரு தொழிற்சங்க வாதியாகப் பரிணமித்து, ‘மண்குடம்’ என்னும் சிறுகதை மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமாகி, ‘பள்ளம்’ , ‘இது வேறு இதிகாசம்’ போன்ற குறும்படம், ஆவணப்படங்கள் மூலம் அவர் எடுத்த பல பரிணாமங்களை தன் அனுபவங்களாக நினைவுகளைப் பதிவு செய்த விதம் தனித்துவமானது. ஏனெனில் அதில் தன் மகிமைகளைப் பிரதாபங்களைப் பேசாமல் அவைகளின் மூலம் அவர் சமூகத்தை எப்படி உள்வாங்கி உள்ளார் என்பதையே அவைகள் பேசுகிறது. ஒரு தனிமனிதனின் வாழ்வென்பது அவனைப்பற்றியது மட்டுமல்ல; அவன் வாழும் காலத்தின் மனிதர்களைப் பற்றியது அவர்களின் பண்பாட்டை, வாழ்வியல் முறையைப் பற்றியது. மொத்தத்தில் சமூகத்தை ஒரு சமுத்திரமாகக் கொண்டால் ஒரு தனிமனிதனின் வாழ்வென்பது ஒரு துளி கடல்!

எல்லா மனிதர்களுக்கும் தன் வாழ்விலிருந்து எடுத்துச் சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அதனை எப்படி சக மனிதனிடம் சுவாரஸ்யமாகக் கடத்துவது என்பது தான் பெரும் சவால்! அந்தச் சவாலை மிக எளிதாக தன் எழுத்தின் ஆளுமையால் இந்நூலின் ஆசிரியர் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்.
தன் கடந்த காலத்தை நமக்குள் கடத்திவிட அவர் இதயம் துடித்ததை அவர் எழுத்தில் உணர முடிகிறது! நமக்காகத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த இதயத்தை ஒருமுறையேனும் வாங்கி படித்துவிடுவதே நாம் அதற்குச் செய்யும் கைமாறு!

– ஆன்டோ கோல்பர்ட்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here