Subscribe

Thamizhbooks ad

மொழிபெயர்ப்புக் கவிதை: இறுதிப் போர் – வசந்ததீபன்

ஓ… பரமேஸ்வரா!
எவ்வளவு மிருகத்தனமாக காலில் போட்டு மிதிக்கிறது எங்களை
உன்னுடைய வரலாறு.
பார், எங்களுடைய முகங்களைப் பார்
பசியின் தாக்குதலின் அடையாளம்
தெளிவாக காண்பிக்கும் உனக்கு
எங்களின் முதுகைத் தடவினால்
கருவேல முட்களால் உன்னுடைய இரண்டு
கைப்பிடியளவு நிறையும்
எங்களுடைய வீங்கிப்போன தோள்களைத் தொடு
காளை மாடுகளின் பழுத்த கழுத்தின் வலியை
இலகுவாக உணர்த்தும் உனக்கு.
எங்களின் காலனியில்
இருமிச் சுமை சுமக்கிற
பிணங்களைப் பார்
உயிர் வாழ்வதின் சாகசம் மட்டுமே!
தொலைந்து போவாய் நீ.
நாங்கள் மறுபடியும் வாழ்கிறோம்
மற்றும் நீ! மெளனமாய் இருக்கிறாய்
ஊமை போல மெளனமாய்.
சைத்தானுடயது தான் வழித்தோன்றலாக இருக்கிறது
அதை நாங்கள் அடக்கி ஆள
புரிந்து
பூஜை செய்து கொண்டிருக்கிறோம்
வாழ்வு முழுவதின்
கொடூரமான காயத்தின் பதில்
உள்ளங்கையின்
கிடைமட்ட ச் சாய்ந்த கோடுகளிலிருந்து புரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
சக்கரதாரி!
விரும்பியும்
நாங்கள்
விரும்பாமல் பெறுகிறோம் உன்னை
ஏனென்றால் எங்களுடைய கிராமத்துத் தலைவனின் தோற்றம்
சற்றும் வித்தியாசமில்லாத
உன்னுடைய
தோற்றத்திலிருந்து கிடைக்கிறது
மற்றும்
உன்னால் உருவாக்கப்பட்ட பெண்கள்
நகரின் மிக ஆடம்பரமானவர்களாக ஆவதாக
காண்பிக்கப்படுகிறார்கள் எங்களுக்கு.
உன்னுடைய காலடிகளில்
தலை வைக்க யோசிக்கிறோம்
உன்னுடைய பூமியில் புதைக்கப்பட்ட தடித்த லிங்கம்
மூத்தவர் ஏகல்யாவின் வெட்டப்பட்ட பெருவிரலாக
தெரிகிறது எங்களுக்கு.
உன்னுடைய முற்றத்தில்
சுற்றி அலைகிற கூட்டம்
மூதாதையர்களின்
புகையும் சிதையினை
நினைவுபடுத்துகின்றது
மற்றும் உன்னுடைய
பாதி பானை போன்ற யோனி மீது
சிதறிய சிவப்பு ரோஜா நிற இதழ்கள்
அழுகிற கண்களிலிருந்து
பிடுங்கிய
கனவுகளாகத் தோன்றுகின்றன.
லீலாதரா.!
நாங்கள் எங்கே நின்று இருக்கிறோம் அங்கே
ஒவ்வொரு பக்கம் வேட்டையாடுபவர்களின்
குடியிருப்புகள் தாம் இருக்கின்றன
பூமியிலிருந்து ஆகாயம் வரை
வானவில் வலைகளை விரித்திருக்கிறார்கள் அவர்கள்
சமதளமான நிலத்தைத்
தோண்டித் தோண்டி
முரட்டுத்தனமாக ஆக்கி இருக்கின்றன பன்றிகள்
வேர்களில் விஷம் , இருதயங்களில் வெறுப்பு
காற்றில் துப்பாக்கிக் குண்டுகளை விதைத்தனர் அயோக்கியர்கள்
வில்லாளி!
நாளை அயோக்கியர்களோடு,
நிகழும் இறுதிப் போரில்
நீ எங்களுடைய தேரோட்டியாக இருக்கமாட்டாய்
மற்றும் முழு போரில்
நாங்கள் எங்களுடைய புஜங்களால் மட்டுமே
வெற்றி பெறுவோம் என்பதை
இன்று அறிந்தோம்
நன்றாக அறிந்து இருக்கின்றோம்.iruthgippor

ஹிந்தியில் : மல்கான் சிங்
தமிழில் : வசந்ததீபன்

Latest

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு,...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here