இசைப் பாடல்
***************
என்னை நீ மறந்தாய்
உன்னை நான் மறவேன்
உயிரே நீ பிரிந்தாய்
உணர்வே நான் பிரியேன்
கடந்த நாட்களில் காதல் பேசியதே!
கடக்கும் நாள்களிலோ கண்ணீர் பேசிடுதே!
இந்த வலிகள் இன்னும் நீளுமோ!
இனிய நேசம் எப்போது பேசுமோ!
இனியவனே! எனது பாசம் போதலையா?
இன்னும் உனது கோபம் தீரலையா?
பாலை வனத்தில் சோலையாய்
பாவை மனத்தில் பரிதியாய்
பிடிவாதம் பிழையாய் புகுந்து கொண்டதே!
பிரிவில்லா உறவில் விரிசல் வந்ததே!
எங்கே நான் செல்ல
என்னுயிரே வா சொல்ல
எனக்காக இங்கு யாருமில்ல
என்னவனே பேசு மெல்ல.
– சரவிபி ரோசிசந்திரா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Super sir this kavithai is very nice . My own feel 😔……
Thank you
சிறப்பு
நன்றியும் மகிழ்வும்
அருமை வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி
excellent
நன்றி
மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் தங்கை
நன்றி
Nice
Thanks