Ithu Sathiyam Pesuthalalla Sandhegam Poem By Pangai Thamizhan பாங்கைத் தமிழனின் இது சாதியம் பேசுதலல்ல சந்தேகம்! கவிதை

இது சாதியம் பேசுதலல்ல சந்தேகம்! கவிதை – பாங்கைத் தமிழன்




வர்ணத்தைக்கொண்டு
பிரித்துப் பார்க்கும்
வர்ணாஸ்ரம அய்யம்!
நெற்றியில்
பிறப்பு சாத்தியப்படட்டும்!

மார்பில் ஜனனம்
உண்டாகியிருக்கட்டும்!
இடுப்பில் பிறப்பு
இருந்து விட்டுப் போகட்டும்!
காலில் பிறந்தவரெல்லாம்
நம்பி இருக்கட்டும்!

எந்த உறுப்பிலும்
பிறக்காமல்
அவன் அப்பா அம்மா வுக்குப்
பிறந்தவன்
ஏன் இழிந்த நிலை?

இப்போது
சொல்லுங்கள்
இப்படிப் பார்க்கும்
உங்கள் பிறப்பு
இப்போது
எந்த நிலை?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *