வழுக்கு நிலத்தில்
பற்றிய கரத்தைப்
பட்டென உதறிப்பிரிதல்..
உணர்வுப் பெருக்கில்
இதயம் பகிர்கையில்
அலைபேசி இணைப்பைச்
சட்டெனத் துண்டித்தல்…
‘சாப்டியா’ எனும் கேள்விக்கு
நாகரீகம் கருதியேனும்
எதிர்வினா வினவாதிருத்தல்… பொருட்களை நேசித்து
மனித மனங்களை
கசக்கித் தலைசுற்றி
தண்டவாளத்தில் எறிதல்…. வாழ்க்கைக்கான அர்த்தமென
இறுமாந்து இருப்போர்க்கு
சில மணித்துளிகளைக்கூட
கொடையளிக்காது மௌனித்தல்…
சுவர்களை இணைக்கும்
அறைக்கதவுகளை
அறைந்தறைந்து சாத்தி
இதயக்கதவை
இற்றுப்போக விடுதல்..
அன்றாடம் புகைவதைவிட
அக்கினியில் மூழ்கி
அடர்வனத்தின்
அமைதி தழுவ நிற்கலாம்
நிராதரவாக….!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.