பாவலர் வ.சு.வசந்தா எழுதிய "இயற்கையைக் காப்போம்" தமிழ் கவிதை | பாவலர் வ.சு.வசந்தாவின் கவிதைகள் | புதுக்கவிதை | Tamil Kavithai | www.bookday.in |

கவிதை: இயற்கையைக் காப்போம் – பாவலர் வ.சு.வசந்தா

கவிதை: இயற்கையைக் காப்போம்

இயற்கை அழகு எங்கும் பரவ
செயற்கை வலியை சிதிலம் செய்வோம்
மயக்கும் வனப்பு மனதில் நிலைக்க
தயக்கம் தவிர்த்து தடைகள் களைவோம்

மகிழ்வுடன் நெகிழி மனத்தைக் கவரும்
பழகப் பழக பழையன மறக்கும்
பண்டைய மரபு மறந்தே போகும்
நெகிழிக் குப்பை நிலத்தை அழிக்கும்
மரங்களை வெட்டி மனைகள் அமைத்து
அரணாய் இருந்த அழகியல் கொன்று
உயர்ந்த வீடுகள் ஒவ்வொரு நாளும்
அயர்ந்த மனிதனின் அடுக்காய் வந்தது
நிலமும் இல்லை நெற்பயிர் இல்லை

கலகம் கொண்ட களமே எங்கும்
இயற்கையின் இடரில் ஏகாந்தம் மறைந்து
முயற்சி இன்றி முடங்கிப் போனான்
சுவாசம் மறைந்து சுவாசிக்க முகமூடி
சகவாசம் மாறி சஞ்சலம் கொண்டான்
நெகிழிக் குப்பையை நெறிப்பட ஒழிப்போம்
இயற்கை காத்து இன்பம் சேர்ப்போம்

எழுதியவர் : 

✍🏻பாவலர் வ.சு.வசந்தா
சென்னை 92

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *