ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்
அடக்கி ஆளும் ஐம்பொறி வாழ்வு
ஏழேழு பிறவிக்கும் குன்றா நலமாகும்
பிராணனை நாம் அறிய
உள்ளடக்கிய ஐம்பூதங்களை அறிவோம்
அகமும் புறமும் நன்றென அமைய
தன்வசமாய் ஐம்பொறிகளை
ஆக்கிடணும்
ஆட்சி கொள்ளாவிடின் என்றும்
அவ்வறிவு இல்லா உயிரொடு ஒப்பர்
நன்னெறியாம் செந்நெறியைக் கடைபிடித்தால்
மன அறிவை நெறிப்பட உணர்வர்
நல்வினை தீவினை அறிய
உயிரைப் பிணித்துப் பயணிக்க
வினைகள் உணர்விக்க
ஐம்பொறியை ஆட்சி கொள்
சிற்றின்பத்தைக் கட்டுப்படுத்தி
அற்ப இன்பங்களை அறவே அறுத்து
வாஞ்சையுடன் வலிமை சேர்க்க
ஐம்பொறி வேட்கையில் கலக்காமல்
காத்து நிற்கும் வலிமையை
ஒழுக்கத்தோடு இணையப்பெற்ற
புதிய சுயத்தினை பெறுவோம்
அவ்வழியே எழுமையும் ஏமாப் புடைத்து
எழுதியவர்
முனைவர் போ. அனு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஆமையும் ஐந்தடக்கல் என்பது சரி.ஆனால் ஏழேழு பிறவிக்கு என்பது அறிவியலுக்கு முரணாக உள்ளது. இப்பிறவியில் நன்மை பயக்கும் என்பது தான் சரி. மறைமுகமாக அறிவியல் எதிர்ப்பு என்பதில் கவிதை அழகை கெடுக்கிறது