Jai Bhim Poem by Adhirai ஆதிரையின் ஜெய்பீம்! கவிதை

ஜெய்பீம்! கவிதை – ஆதிரை




தீண்டப்படாமலிருந்த
வார்த்தை ஒன்று
பேசத் தொடங்கியுள்ளது!

ஒரு நூற்றாண்டை
கடந்த சொல்
இப்பொழுதுதான்
நடக்கத் தொடங்கியிருக்கிறது!

ஊமை சனங்களின்
குரல் எல்லோருக்கும்
கேட்கத் தொடங்கியிருக்கிறது!

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின்
வலி புரியத் தொடங்கியிருக்கிறது!

ஆதிக்கத்திற்கு எதிரான
சமத்துவப் பாதை
திறக்கப்பட்டிருக்கிறது!

சனாதனத்திற்கு எதிரான சக்திவாய்ந்த
ஒரு ஆற்றல் பிறந்திருக்கிறது!

ஆரிய சூழ்ச்சியால்
திறந்தவெளி சிறையாக்கப்பட்ட
ஐந்து இலட்சம் சேரிகளின் தலைநிமிர்வு!

அதை…………..!

சாதிக்குள்
சமயத்திற்குள்
ஆதிக்கத்திற்குள்
அதிகாரத்திற்குள்
என்று….எதற்குள்
அடைத்தாலும்…..

கிளர்ந்தெழும்!இருட்டைக் கிழித்தெழும்!

ஜெய்பீம்….!
முழக்கம் அல்ல…
விடுதலையின் குரல்!
அதை….
மொழிபெயர்த்து பாருங்கள்!

வலி புரியும்
அன்பு தெரியும்
அறம் மிளிரும்
சமத்துவம் ஒளிரும்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *