இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் நூலாசிரியை டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களின் மூன்றாவது நூலான மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் ஏறாவூர் நகரில் வெளியீடு
********************************
ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாதம்-2024 இறுதி நாள் விழாவும் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்கள் எழுதிய மஞ்சள் மாம்பூ ஹைக்கூ கவிதை நூல் வெளியீடும் கடந்த 21/2/2025 வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 4 மணிக்கு ஏறாவூர் வாவிக்கரைப் பூங்காவில் மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
ஏறாவூர் பொது நூலக ஏற்பாட்டில் இவ்விழா பலவிதமான நிகழ்வுகளோடு ஜனரஞ்சகமாக அமையப் பெற்றிருந்த இவ்விழாவில் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமை தாங்க ஏறாவூர் நகரபிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
செங்கலடி பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எச்.எம்.மௌஜூத், வைத்திய அதிகாரி டாக்டர் ஜலீலா முஸம்மில், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இப்பெரு விழாவில் பங்கு கொண்டனர்.
நூல் பெற தொடர்பு கொள்ளுங்கள்
+94771308495
jaleelamuzammil@gmail.com
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.