ஒளித்து வைக்க முடியவில்லை ஒண்டிக் குடித்தனம் பண்ணும்
உணர்வுடன் பின்னிய
உன் ஞாபங்களை!இப்போதெல்லாம்
பெருஞ்சோம்பல் எனக்குள்
சாய்ந்தே கிடக்கிறேன்
தாங்க நீயிருப்பதால்!
உணர்வுடன் பின்னிய
உன் ஞாபங்களை!இப்போதெல்லாம்
பெருஞ்சோம்பல் எனக்குள்
சாய்ந்தே கிடக்கிறேன்
தாங்க நீயிருப்பதால்!
புள்ளிதான் வைத்தேன்
பூமாலையாக வந்து விழுகிறது
உனை நினைத்ததும் கவிதைகள்!
ஏதேனும் பேசியிருக்கலாமோ?
இரைந்து கதறுகிறது
உன் மௌனத்துக்குப் பக்கத்தில்
என் ஆன்மா!
மாபெரும்
மொழித்திறன் கொண்டு
மறுமொழி தருகிறது
ஒவ்வொரு உயிர் வலியிலும்
இந்த மௌனம்!
இதயப்பூட்டை
உடைத்து திறந்தது
உன் ஒரேயொரு
காதல் பூ
எத்தனையோ
கோட்டைகளும் கோபுரங்களும்
உருவாகி விடுகின்றன
ஒரு கணம்
உன் ஆன்மா
என்னுடன் ஊடுருவி
உரையாடுகையில்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

