ஈரம்
சோளம் விதைத்தோம்
சோதனை வந்தது
வேர்க்கடலை வைத்தோம்
வேதனை சேர்ந்தது
கம்பு பயிரிட்டோம்
கடன் பெருகியது
கீரைகள் வளர்த்தோம்
பயம் பற்றிக் கொண்டது
உளுந்து விதைத்தோம்
உளைச்சல் தந்தது
கோதுமை விளைகையில்
கோரப்பசி தாண்டவமாடியது
இதுவும் கடந்து போம்
என்றே கடக்க தெம்பு இல்லை
நிலம் மட்டுமல்ல
வயிறும் தான் வறண்டுவிட்டது
இவை வெறும் வரிகள் அல்ல
உழும் குடும்பத்தின் வலிகள்
வறுமை பெருத்து உடல் சிறுத்து
மனம் வருந்தி அழும் வரிகள்
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடி நின்று பயனில்லை
ஆயிரம் இதயங்கள் காய்ந்து கிடக்கின்றன
எழுந்து வந்து கரங்களை நீட்டுவோம்
வீட்டில் உலை கொதிக்கும் போதெல்லாம்
அங்கே
உயிர்கள் கொதிக்கின்றன
சோற்றுக்கு கை நனைத்திடும் போது
மனதையும் சற்று நனைத்துக் கொள்வோம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


உழுகிறவர்களின் வேதனை பகிரும் வரிகள்…வாழ்த்துகள் தோழர்..தொடர்ந்து அவர்கள் வஞ்சிக்க படும்போது மாற்று வேலைக்கு மொத்த பேரும் போய்விட்டால்…நாம் பணத்தையா உண்ண முடியும்…தொடர்ந்து துயர்கள் பல சூழ்ந்தாலும் மறுபடியும் நிலத்தில் இறங்கும் அந்த கால்களுக்கு வந்தனங்கள்..
விவசாயிகளின் வலியை உரக்கக் கூறி உள்ளீர்கள் வாழ்த்துகள் தோழர்
வலிகளை வரிகளாக படைத்த தோழமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
சோற்றுக்கு கை நனைத்திடும் போது
மனதையும் சற்று நனைத்துக் கொள்வோம்👏👏👏👏👏
வலிகளை வரிகளாக படைத்த தோழமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
விவசாயிகளின் வலிகளை வரிகளாக்கிவிட்டீர்கள் அருமை.
விதைத்து விதைத்து விவசாயிகள் வயிறு வறண்டு போவது
அரசியலாலும் என்பதை சேர்த்து சொல்வது நடக்கட்டும்
அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களும் தட்டில் சோறு போட்டு தான் திண்கிறார்கள். ஆனால் உழவர்கள் போராட்டம் என்றால் இரும்பு கரங்கள் கொண்டு அடக்குகிறார்கள். உழுபவனுக்கு ஆழக்கு கூட மிஞ்சுவதில்லை எப்போதும் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது உங்கள் வரிகள்.