இருப்பது ஒரு மனம்..!!

ஒரு உடல்
ஓராயிரம் எண்ணங்கள்
நல்லன பல தீயன சில
அவை செயல்களாவது நம் வசம்
இருப்பது ஒரு மனம்..

நல்லோர் ஒரு புறம்
தீயோர் ஒரு புறம்
இவ்விருவரும் ஓரே புறம்
எரிகாட்டில் அக்கினி வசம்
இருப்பது ஒரு மனம்..

தீயவை தேடல் சிற்றின்பம்
நல்லவை தேடல் பேரின்பம்
தீயவையும் நல்லன போர்வையில்
யாவும் மாய வசம்
இருப்பது ஒரு மனம்..

வான் மண் கடல் போல
மனதின் குணம் அவை போல
வானாக பரந்து கடலாக விரிந்து
மண் போல நிலைத்திருப்போம்
இருப்பது ஒரு மனம்..

நன்றி

ஜெயஸ்ரீ



9 thoughts on “இருப்பது ஒரு மனம்..!! – ஜெயஸ்ரீ”
  1. சிறப்பான கவிதை வரிகள் தோழர்…வாழ்த்துக்கள்💥💫

  2. கவிதை சிறப்பு தோழர்..
    ‘தீயோரும் நல்லோரும் எரிகாட்டில் அக்கினி வசம்’ அருமை 👏👏💐
    தொடர்ந்து எழுதுங்கள் தோழரே..

  3. மணம் வீசும் கவிதை வரிகள் வாழ்த்துகள் தோழர்
    இன்னும் அதிகம் அதிகம் எழுதி புத்திகத்தில் மணம் வீசட்டும் உங்கள் எழுத்து.

  4. சிறப்பான கவிதை தோழர். மனமார்ந்த வாழ்த்துகள்

  5. அருமை தோழர். தொடரட்டும் கவிதைகள். கவிஞர்களின் வரவு தமிழ் உலகுக்கு கிடைத்த நல்லதொரு எதிர்காலம்.

  6. மனம் தொட்ட கவிதை. வாழ்த்துகள் தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *