வில்பிரடோ ஃபெடெரிகோ டமாசோ பரேட்டோ (Vilfredo Federico Damaso Pareto) ஜூலை 15, 1848இல் பிறந்து ஆகஸ்ட் 19, 1923இல் மறைந்த இத்தாலியப் பொருளாதார அறிஞர், சமூகவியலாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். பொறியியலில் பயிற்சி பெற்ற பரேட்டோ, பொருளாதார பகுப்பாய்வுகளுக்குக் கணிதக் கருவிகளைப் பயன்படுத்தினார். பரேட்டோவின் ஆய்வினை 80-20 கொள்கை என்று குறிப்பிடப்பட்டது அதாவது 80% செல்வம் 20% மக்களுக்குச் சொந்தமானது. இது பல பொருளாதார மற்றும் மேலாண்மை சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டு உதவியாகக் காணப்பட்டது. அவரது படைப்புகளை அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
Political Economy (அரசியல் பொருளாதாரம்)
கார்ல் மார்க்ஸின் மைய கோட்பாட்டை பரேட்டோ கடுமையாக விமர்சித்தார். மார்க்ஸியமானது சொத்துரிமையற்ற தொழிலாளர் வர்கம் பாட்டாளி வர்க்கம், சொத்துடமை உடைய முதலாளித்துவ வர்க்கங்களுக்கிடையே வரலாற்றுப் போராட்டத்தின் மீதான முக்கியத்துவத்தைச் சார்ந்ததாக உள்ளது, இது சமூகத்தை தவறாக வழிநடத்தும் என்று பரேட்டோ குறிப்பிடுகிறார்.
தேவைக்கும் நுகர்வோர் விருப்பங்களுக்கும் இடையிலான உறவையும், உற்பத்திக்கும், நிறுவனங்களின் லாபத்தை அதிகப்படுத்தும் நடத்தைக்கும் இடையிலான உறவைப் பகுப்பாய்வு செய்வதில் பரேட்டோ கவனம் செலுத்தினார். சமன்பாடுகளின் எளிய நேரியல் அமைப்புகளுக்குப் (simple liear systems) பதிலாக, வேறுபட்ட நுண்கணிதம் (calculus) மற்றும் லக்ரேஞ்சியன் பெருக்கிகள் (lagrangain multipliers) தேர்வு கருவிகளாக இருந்தன. லியோன் வால்ராஸின் அனைத்து பெரிய கருப்பொருள்களையும் அவர் தனது புதிய வழி கொண்டு மாற்றினார்.
Pareto’s Optimum (பரேட்டோவின் உகந்தது தன்மை)
பரேட்டோ உகந்த தன்மை என்பது செயல்திறனின் அளவீடு ஆகும். ஒவ்வொரு வீரரையும் குறைந்தபட்சம் நன்றாகவும், குறைந்தபட்சம் ஒரு வீரரையாவது கண்டிப்பாகச் சிறப்பாகவும் மாற்றும் வேறு எந்த விளைவும் இல்லாவிட்டால், ஒரு விளையாட்டின் விளைவு “பரேட்டோ உகந்தது” ஆகும். பரேட்டோ உகந்த விளைவைக் குறைந்தது ஒரு வீரரையாவது பாதிக்காமல் மேம்படுத்த முடியாது. பரேட்டோ வெவ்வேறு பொருளாதாரங்களில் வருமானப் பகிர்வையும் ஆராய்ந்து, சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல், வருமானப் பகிர்வு எதிர்மறை அதிவேகக் குடும்பத்தைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு வந்தார்.
பரேட்டோவின் முக்கிய பொருளாதார பங்களிப்பு, பரேட்டோவின் வருமானப் பகிர்வு விதியை அவர் விளக்கியதாகும். பரேட்டோவின் சட்டம், 0.8 புள்ளியைச் சுற்றி மையமாகக் கொண்ட மக்கள்தொகையில் சுமார் 20% பேர், வளர்ந்த நாடுகளில் 80% செல்வத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறது. இது இன்றுவரை உண்மையாகவே உள்ளது. பரேட்டோ பொதுவான பயன்பாட்டில், பயன்பாடு என்பது தனிநபர் அல்லது சமூகத்தின் நல்வாழ்வைக் குறிக்கிறது, ஆனால் மக்கள் பொருளாதார முடிவுகளை எடுக்கும்போது, அவர்கள் தங்களுக்கு விரும்பத்தக்கதாக உணரும் விஷயங்களால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை பரேட்டோ உணர்ந்தார், அது அவர்களின் உண்மையான நல்வாழ்வுக்கு ஒத்திருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல். இதனால், தேய்ந்துபோன “பயன்பாடு“க்கு பதிலாக “திருப்தி” என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.
Sociology (சமூகவியல்)
1916இல் வெளியிடப்பட்ட “Trattato di sociologia generale”, பரேட்டோவின் சிறந்த சமூகவியல் தலைசிறந்த படைப்பாகும். மனித செயலை எச்சம் மற்றும் வழித்தோன்றலாக எவ்வாறு அழகாகக் குறைக்க முடியும் என்பதை அவர் விளக்கினார். மக்கள் தர்க்கரீதியான உணர்வுகள் (எச்சங்கள்) அடிப்படையில் செயல்படுகிறார்கள், பின்னர் அவற்றுக்கான நியாயப்படுத்தல்களை (வழித்தோன்றல்கள்) கண்டுபிடிக்கிறார்கள். பரேட்டோவின் கோட்பாட்டில், அவர் வழித்தோன்றல்கள் என்று அழைப்பது, மக்கள் தங்கள் அடிப்படையில் தர்க்கரீதியான அல்லாத, உணர்வு சார்ந்த செயல்களை பகுத்தறிவுப்படுத்தப் பயன்படுத்தும் வெளிப்படையான தர்க்கரீதியான நியாயப்படுத்தல்களாகும். பரேட்டோவின் சமூகக் கோட்பாடு, ஆளும் உயரடுக்கில் வகுப்பு I மற்றும் வகுப்பு II மக்கள் சமநிலையில் இருக்கும் ஒரு சமநிலைக்குத் திரும்பும் போக்கு இருப்பதாகக் கூறியது.
ஆதாரம்
www.newworldencyclopedia.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

