1. ஆல்ஃபிரட் மார்ஷல் (Alfred Marshall) ஜூலை 26, 1842இல் பிறந்து ஜூலை 13, 1924இல் மறைந்த உலகப் புகழ்பெற்ற பிரித்தானியப் பொருளாதார நிபுணர். அவர் புதிய தொன்மை பொருளாதாரப் பள்ளியின் முக்கிய நிறுவனர்களில் ஒருவர். அளிப்பு மற்றும் தேவை, விலை நெகிழ்ச்சி, நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் உபரி, இறுதி நிலைப் பயன்பாடு மற்றும் உற்பத்தி செலவுகள் போன்ற அடிப்படை பொருளாதாரக் கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் அவரது முக்கிய வழங்கலாக்கும். தேவை நெகிழ்ச்சி, நுகர்வோர் உபரி, போலி வாரம் மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனம் உள்ளிட்ட பல புதிய கருத்துக்களை அறிமுகப்படுத்தினார். இவை அனைத்தும் பொருளாதாரத்தின் அடுத்தடுத்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் உபரி என்ற கருத்து மார்ஷலின் மற்றொரு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாகும். ஒரு நுகர்வோர் வாங்கும் ஒரு பொருளின் ஒவ்வொரு அலகிற்கும் விலை பொதுவாக ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் ஒவ்வொரு கூடுதல் அலகின் நுகர்வோருக்கு மதிப்பு குறைகிறது என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து அலகுகளின் நுகர்வோரின் மதிப்புக்கும் அலகுகளுக்குச் செலுத்தப்படும் தொகைக்கும் இடையிலான வேறுபாடு நுகர்வோர் உபரி என்று அழைக்கப்படுகிறது. மார்ஷல் வெவ்வேறு “நேர எல்லைகளை” (time horizons) அறிமுகப்படுத்தினார். முதலாவதாகச் சந்தை காலம், ஒரு பொருளின் இருப்பு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் அளவு என்பது. இரண்டாவதாக, குறுகிய காலம் என்பது உழைப்பு மற்றும் பிற உள்ளீடுகளைச் சேர்ப்பதன் மூலம் விநியோகத்தை அதிகரிக்கக்கூடிய நேரமாகும், ஆனால் மூலதனத்தைச் சேர்ப்பதன் மூலம் அல்ல என்பதாகும். மூன்றாவதாக, நீட்டிக்கப்பட்ட காலம் என்பது மூலதனத்தை அதிகரிக்கத் தேவையான நேரத்தைக் குறிக்கிறது. பொருளாதாரம் என்பது தொழில்நுட்பம், சந்தை நிறுவனங்கள் மற்றும் மக்களின் விருப்பத்தேர்வுகள் அவற்றின் நடத்தையுடன் இணைந்து உருவாகும் ஒரு பரிணாம செயல்முறை என்று மார்ஷல் வாதிட்டார்.
ஆதாரம்: www.spureeconomics.com ; www.britannica.com ; www.econlib.org
**************************
2. ஜக்தீஷ் பகவதி (Jagdish Bhagwati) ஜூலை 26, 1934இல் பிறந்த இந்திய-அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார். பன்னாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி கோட்பாட்டிற்கான பங்களிப்பிற்காகப் புகழ்பெற்றவராக அறியப்படுகிறார். பகவதி இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதாரத்தையும், டெல்லி பல்கலைக்கழக பொருளாதாரப் பள்ளியில் பன்னாட்டு வர்த்தகத்தையும் கற்பித்தார். 1968இல் அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற எம்.ஐ.டியின் பொருளாதார பேராசிரியாக பணியாற்றினார், இத்துடன் ஃபோர்டு சர்வதேச பொருளாதாரப் பேராசிரியரானார்.
பகவதி, வரி மற்றும் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தின் (GATT) (1991–1993) இயக்குநர் ஜெனரலின் பொருளாதாரக் கொள்கை ஆலோசகராகவும், உலகமயமாக்கல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு ஆலோசகராகவும் (2001) மற்றும் உலக வர்த்தக அமைப்பின் (WTO) புற ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 1991ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதார சீர்திருத்தங்களின் அறிவுசார் தந்தையாக அவர் பரவலாகக் கருதப்படுகிறார்.
2014ஆம் ஆண்டில், பைனான்சியல் டைம்ஸ் அவரை “நோபல் பரிசை வென்றிராத அவரது தலைமுறையின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர்” என்று குறிப்பிட்டது. அவர் பல்வேறு பொருளாதார நிலைமைகளின் கீழ் பணியாற்றியுள்ளார், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பணக்கார பொருளாதாரங்களிலிருந்து ஏழ்மையான பொருளாதாரங்கள் வரை அவர்களின் சூழ்நிலையில் மாற்றத்தைக் கொண்டுவர உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.britannica.com ; www.columbia.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

