பிரடெரிக் பாஸ்டியாட் (Frederic Bastiat) ஜூன் 30, 1801இல் பிறந்து டிசம்பர் 24, 1850இல் மறைந்த பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார், தடையற்ற வர்த்தகம் மற்றும் ஆடம் ஸ்மித்தின் பொருளாதாரத்தை ஆதரித்து எழுதிய அவரது பத்திரிகை எழுத்துக்காக மிகவும் பிரபலமானவர். அரசாங்கங்களுக்குத் தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எந்த சட்டப்பூர்வமான அதிகாரமும் இல்லை என்று நம்பினார். பாஸ்டியாட்டின் முதல் புத்தகமான Economic Sophisms, இணையற்ற கற்பனையுடன், அரசாங்க தலையீட்டின் தவறான தன்மையை நிரூபிக்கும் சிறிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
பாஸ்டியட்டின் அடுத்த புத்தகமான The Law என்பது தத்துவத்தில் அவர் மேற்கொண்ட முயற்சியாகும். பாஸ்டியட் தனது மூன்றாவது புத்தகமான Economic Harmonies இல் சந்தை அமைப்பு பற்றிய தனது ஆய்வை விரிவுபடுத்தினார். அதில், பாஸ்டியட் தனது தத்துவார்த்தத்தை முறையாக உருவாக்கினார். அவருடைய கட்டுரைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அவருடைய மரணத்திற்குப் பிந்தைய தொகுப்பான Selected Essays on Political Economy பாஸ்டியட்டின் சில சிறந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது. அவரது எழுத்துக்கள் முழுவதும், பாஸ்டியட் ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பினார்: எந்த வகையான பொருளாதாரம் மனித வளர்ச்சியைச் சிறப்பாக ஊக்குவிக்கிறது? என்பதுதான், அவரது பதில் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய இரண்டு உண்மைகளை உருவாக்குகிறது அவை, வரம்பற்ற தேவைகள் மற்றும் பற்றாக்குறை வளங்கள் ஆகும்.
சூரியனுக்கு எதிராகப் பாதுகாப்பு கேட்டு மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள் கொண்டு வந்த ஒரு மனுவை பாஸ்டியட் இட்டுக்கட்டினார், சூரியனை ஒளியை வழங்குவதில் ஒரு போட்டியாளராக நீக்கினால் மெழுகுவர்த்தி தயாரித்தல் மற்றும் தொடர்புடைய தொழில்கள் பெரிதும் லாபம் ஈட்டும் என்று பரிந்துரைத்தார். பாஸ்டியட்டின் மனு மிகவும் பிரபலமானது, நவீன பொருளாதார வல்லுநர்கள் பெரும்பாலும் கட்டுப்பாடற்ற வர்த்தகத்தைப் பாதுகாப்பதில் அதை மேற்கோள் காட்டுகிறார்கள்; உண்மையில், பால் சாமுவேல்சன் அவருடைய அதிகம் விற்பனையாகும் பாடப்புத்தகமான Economics இல் ஒரு அத்தியாயத்தின் தலைப்பில் அதைச் சேர்த்தார். அரசாங்கக் கொள்கையின் unseen (கண்ணுக்குத் தெரியாத) விளைவுகளையும் பாஸ்டியட் வலியுறுத்தினார். வெளிநாட்டுப் போட்டியிலிருந்து ஒரு நாட்டின் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வரி விதிக்கும் கோட்பாடு அல்லது நடைமுறையான பாதுகாப்பு வாதத்தில் உள்ள குறைபாடுகளை அடையாளம் காண்பதில் பாஸ்டியட் அறியப்பட்டார்.
ரூசோவுக்கு மாறாக, சமூக உலகில் இயற்கையான இணக்கமான ஒழுங்கு உள்ளது என்று பாஸ்டியாட் கற்பித்தார், இது வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு வரம்பற்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய இயக்கப்படும் மனிதர்களுக்கு இடையிலான இலவச பரிமாற்றத்திலிருந்து வெளிப்படும் ஒரு ஒழுங்கு. இதன் விளைவாக அனைவரின் பொருள் நல்வாழ்விலும் நிலையான முன்னேற்றம் ஏற்படுகிறது. ஜோசப் ஷூம்பீட்டர் பாஸ்டியாட்டை அவரது மரணத்திற்குக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு “இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அறிவார்ந்த பொருளாதார பத்திரிகையாளர்” என்று விவரித்தார்.
ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.mises.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

