“குழந்தை மொழியும் ஆசிரியரும் – ஒரு கையேடு” – நூல் அறிமுகம்
“ஆசிரியர் என்பவர் அதிகாரம் செலுத்துபவர் அல்ல”
கல்வியாளர் கே. கிருஷ்ணகுமார் எழுதியுள்ள “குழந்தை மொழியும் ஆசிரியரும்” என்ற நூல், கல்விப்புலத்தில் மிக முக்கியமான ஒரு படைப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளை வெறும் “மாணவர்களாக” பார்க்காமல், அவர்களைத் தனித்திறன் கொண்ட மனிதர்களாகப் பார்க்கத் தூண்டும் ஒரு வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது.
இந்த நூல் முழுக்க முழுக்க “குழந்தை மையக் கல்வியை” வலியுறுத்துகிறது.
ஒரு ஆசிரியர் வகுப்பறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விட, ஒரு குழந்தை எவ்வாறு இயல்பாகக் கற்கிறது என்பதை ஆசிரியர் எப்போது புரிந்து கொள்வார் என்ற கேள்வியை இந்த நூல் எழுப்புகிறது.
மொழி என்பது வெறும் பாடம் அல்ல, மொழி என்பது ஒரு கருவி மட்டுமல்ல, அது மாணவர்களின் மனதை, சிந்தனையை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களோடு கூறுகிறது இந்த நூல்.
ஆசிரியர், குழந்தைக்கும் மொழிக்கும் உள்ள உறவு எத்தகையது, இந்த உறவை வலுப்படுத்த பள்ளி ஆசிரியர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை படம் பிடித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.
பாடப்புத்தகத் தமிழுக்கும், குழந்தைகள் பேசும் இயல்பான மொழிக்கும் இடையே உள்ள இடைவெளியை ஆசிரியர் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
ஆசிரியர் என்பவர் அதிகாரத்தை செலுத்துபவர் அல்ல, மாறாகக் குழந்தைகளுடன் இணைந்து பயணிக்கும் ஒரு தோழர் என்பதைப் பல உதாரணங்கள் மூலம் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களிடம், குழந்தைகள் கேட்கும் “அப்பாவித்தனமான” கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான தேடலை மதிக்க வேண்டும்.
குழந்தைகள் மொழியைப், பிழையாகப் பேசும்போது அதைத் திருத்துவதை விட, அவர்கள் எதைச் சொல்ல வருகிறார்கள் என்ற “பொருளை” ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
வகுப்பறையில் ஆசிரியர் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், குழந்தைகளைப் பேச அனுமதிப்பதன் அவசியத்தை இந்த நூல் விவரிக்கிறது.
மௌனமாக இருக்கும் குழந்தை கூட உள்ளுக்குள் சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்தையும் முன்வைக்கிறார் நூலாசிரியர்.
குழந்தைகள் பள்ளியில் நுழையும்போது ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மொழித்திறனுடன் வருகிறார்கள். ஆனால், பள்ளிக் கல்வி முறையானது குழந்தைகளின் அந்த இயல்பான மொழியறிவை அங்கீகரிக்கிறதா? அல்லது அதைச் சிதைக்கிறதா? என்ற கேள்வியையும் முன் வைக்கிறார் நூல் ஆசிரியர்.
எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் முன், குழந்தைகளுக்குக் கதைகள் மற்றும் உரையாடல்கள் மூலம் மொழியின் மீதான ஆர்வத்தை உருவாக்க வேண்டும். இயந்திரத்தனமான எழுத்துப் பயிற்சிகளைத் தவிர்த்து, அர்த்தமுள்ள வாசிப்பை நோக்கி குழந்தைகளை அழைத்துச் செல்ல வழிகாட்டுகிறார்.
இதன் மூலம் குழந்தைகளின் கற்பனைத் திறனை மொழி எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும், ஆசிரியர்கள் எவ்வாறு ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பதையும் எளிய உதாரணங்களுடன் விளக்குகிறார்.
இந்த நூல் ஒரு மேல்தட்டு அறிவுசார் புத்தகமாக இல்லாமல், களத்தில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கான நடைமுறை கையேடாக இருப்பது இதன் மிகப்பெரிய வெற்றி.
ஒவ்வொரு அத்தியாயமும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் உடனே செயல்படுத்தக்கூடிய யோசனைகளை வழங்குகிறது.
தற்போதைய தேர்வு சார்ந்து இயங்கும் கல்வி முறையில், இந்த நூல் சொல்லும் “சுதந்திரமான கற்றல்” முறையை ஆசிரியர்கள் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் உரையாட வேண்டிய அவசியம் உள்ளது.
பெற்றோர்களும், ஆரம்பக் கல்வித் துறையில் இருப்பவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல் இது. குழந்தைகளின் மழலை மொழியில் ஒளிந்துள்ள ஆழமான அறிவியலை ஆசிரியர்களுக்குப் புரிய வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தலைமை ஆசிரியரும் எழுத்தாளருமான முனைவர் என். மாதவன் மொழிபெயர்ப்பு மிக எளிமையாகவும், வாசிக்கத் தூண்டும் வகையிலும் உள்ளது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | குழந்தை மொழியும் ஆசிரியரும் ஒரு கையேடு |
| ஆசிரியர்: | கே.கிருஷ்ணகுமார் (தமிழில்: முனைவர் என்.மாதவன்) |
| வெளியீடு: |
நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா
சென்னை – 600034 |
| விலை: | ₹.85 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 MJ.பிரபாகர் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
