கவிதை : 'கடல்' (Kadal) - Sea - tamil poetry - தமிழ் கவிதைகள் - துள்ளித் துள்ளி மகிழுங் கடலேதுயரம் இன்றி வாழுங் கடலே - https://bookday.in/

கவிதை : ‘கடல்’

கவிதை : ‘கடல்’

🐟 🐟🐟
துள்ளித் துள்ளி மகிழுங் கடலே
துயரம் இன்றி வாழுங் கடலே
அள்ளி அள்ளிக் கொடுக்குங் கடலே
அதிசயம் நீயே தண்ணீர்க் கடலே!

தண்ணீர்த் துள்ளி அலையென்றாகும்;
தன்மேல் துள்ளும் மீன்கள் வாழும்!
பயணம் போகும் கலமும் துள்ளும்;
படகும் துள்ளும் பயணிகளோடே!

கடலில் வாழும் சங்கின் நிறமோ
பளிச்செனத் துள்ளும் தன்னிறம் காட்டி;
முத்தது துள்ளும் முழு வெண் நிறமாய்
உப்பது துள்ளும் முத்தின் நிறமாய்!

கடலைக் காணும் கண்கள் துள்ளும்;
கரைகளில்லா மனமும் துள்ளும்!
கடலைத் தொட்டால் உடலும் துள்ளும்;
காதல் மனங்கள் அலையை மிஞ்சும்!

கடல்மேல் தோன்றும் காற்றும் துள்ளும்;
கடல் நீராவி மேகம் துள்ளும்!
கவலை உள்ளோர் யாவரும் செல்வீர்;
கடலைக் கண்டால் கரையும் துயரம்!
துயரம் கரைந்தே
துள்ளும் மனதை;
அள்ளித் தருமே அழகுக் கடல்தான்
🐟 🐟🐟 🐟

எழுதியவர் : 

கவிஞர் பாங்கைத் தமிழன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *