Kadalin mel oru Kaiyezhuthu Kavithai By Kala Bhuvan கடலின் மேல் ஒரு கையெழுத்து கவிதை - கலா புவன்

கடலின் மேல் ஒரு கையெழுத்து கவிதை – கலா புவன்

பரந்து கிடந்தது கடல்
சூரியக் கதிர்கள்
கடலின் ஆழத்தை தொடமுயன்று தோற்றன
சிப்பிகள் இதமான குளிரில் முத்துக்களை
தாங்கி நின்றன
பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தன
திமிங்கிலங்கள் பெரிய மீன்களை கவ்விக் கொண்டன
கட்டுமரங்களிலும் படகுகளிலும் மீனவர்கள்
மீன்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்
கப்பல்கள் கடலின் அமைதியை காயப்படுத்திக்கொண்டிருந்தன
காற்று மட்டும் கடலின் மேல்
கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தது
கடலின் கவிதைகள் அலைகளின் மேல் பயணித்து
கரைகளை சென்றடைந்தன
காதலர்கள் கால்களை கடலைகளில் நனைத்துக்கொண்டனர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *