ச. மாடசாமி எழுதிய கிழவனும் கடலும் (Kadalum Kilavanum) - S.Madasamy Book Published by Books For Children , BharathiPuthakalayam - https://bookday.in/

கிழவனும் கடலும் (Kadalum Kilavanum) – நூல் அறிமுகம்

கிழவனும் கடலும் (Kadalum Kilavanum) – நூல் அறிமுகம்

 

நூல் அறிமுகம் :

நூல்  : கிழவனும் கடலும்
ஆசிரியர்: எர்னஸ்ட் ஹெமிங்வே
தமிழில் : ச.மாடசாமி
விலை: 45
பதிப்பகம்: – பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு :  44 2433 2924

நூலை  இணையதளம் வழிப் பெற கிளிக் செய்யவும்  : www.thamizhbooks.com

 

கிழவனும் கடலும், (The old man and the sea) என்பது ஒரு ஆங்கில நாவல் ஆகும். இது எர்னஸ்ட் ஹெமிங்வே எனும் அமெரிக்க எழுத்தாளரால் 1951ஆம் ஆண்டு கியூபாவில் எழுதப்பட்டு, 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஒரு மிகச்சிறிய புத்தகம் மனித வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கங்களையும் விளைவுகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதற்கு இந்தப்புத்தகம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஈராக் அதிபர் சதாம் உசேன் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டபோது மரணம் அடையும் இறுதி நிலையில் அவர் படிக்கக் கேட்டப் புத்தகம் இது ஆகும்.

கிழவனும் கடலும் இந்த நாவலுக்கு இலக்கியத்தற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கிழவனும் கடலும் நாவலுக்கு 1953-இல் அமெரிக்காவின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற சிறந்த நாவலுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக விளக்குகிறது.

கிழவனும் கடலும் என்ற கதையின் சுருக்கம் தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாட நூலில் படக்கதையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் முயற்சி என்ற ஒன்று துணையிருந்தால் வாழ்க்கையினை மிக எளிதாகப் போர்க்களத்தில் வென்று வாழலாம் என்பதை மையக்கருத்தாகக் கொண்ட நாவல் இது ஆகும்.

மனிதன் இயற்கையோடு போராடிக்கொண்டே இருக்கிறான் சில நேரங்களில் தோல்வி அடைகிறான்.ஆனால் முயற்சிகள் என்றும் ஓய்வதில்லை.

மனிதன் இயற்கையோடு நடத்துகிற போராட்டமே அவன் வாழ்வை அமைக்கிறது போராடுவதில் மகிழ்ச்சியும் வெற்றியும் இருக்கிறது என்பதை உணர்த்தும் நாவல்.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தக் கதை .இக்கதையின் நாயகன் சாண்டியாகோ வயதான முதிய மீனவர்.

வயதான மீனவர் மீன் பிடிக்கச் சென்றால் மீன் இல்லாமல் திரும்ப மாட்டார்.மீன் பிடிப்பதில் வல்லவர் ஆனால் தற்போது 84 நாட்களாக எந்த மீனும் அவருக்குக் கிடைக்கவே இல்லை.

மற்றவர்கள் என்னக் கூறினாலும் கவலைப்படாமல் தொடர்ந்து மீன் கிடைக்வில்லையென்றாலும் முயற்சியைக் கைவிடாமல் மீன் பிடிக்கச் செல்கிறார்.

மனோலின் என்ற சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக்கொள்ள அவருடன் செல்கிறான்.

ச. மாடசாமி எழுதிய கிழவனும் கடலும் (Kadalum Kilavanum) - S.Madasamy Book Published by Books For Children , BharathiPuthakalayam - https://bookday.in/
ஆசிரியர்: எர்னஸ்ட் ஹெமிங்வே , தமிழில் : ச.மாடசாமி

படகில் சிறுசிறு உதவிகள் அவருக்குச் செய்துகொண்டே மீன் பிடிக்கும் நுட்பத்தையும் முறையும் கற்றுக்கொள்கிறான்.40 நாட்கள் மீன் கிடைக்காததால் அவன் பெற்றோர் அவனை வேறு படகிற்கு அனுப்பிவிடுகின்றனர். மனோலின் பெரியவரைப் பிரிவதற்கு மனமில்லாமல் கவலையோடு பிரிந்து செல்கிறான்.

தொடர்ந்து 85 வது நாளாக மீன் பிடிக்கச் செல்கிறார் சாண்டியாகோ எனக்கு மீன்கள் கிடைக்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள் அதை மாற்றி நான் மீன்பிடித்துக் காட்ட வேண்டும் என்று துணிந்து செல்கிறார் அதைப்போலவே மிகப்பெரிய மீனையும் பிடித்து விடுகிறார்.

மீனே நீ உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறாய். நான் என் இலக்கை அடையப் போராடுகிறேன் இந்த போராட்டத்தின் முடிவில் ஒன்று நான் உயிரோடு இருப்பேன் அல்லது நீ இருப்பாய் என்று கூறி தூண்டிலில் சிக்கிய மீனோடு போராடி மீனைக் கரைக்குக் கொண்டு வருகிறார்.

கரைக்கு வரும்போது மீன் தலையைத் தவிர பிற பாகங்களை மற்ற மீன்கள் தின்று விடுகிறது.

கரையிலிருந்த மீன் தலையையும் மீன் எலும்பையும் பார்த்து சாண்டியாகோவை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

தாத்தா உன் திறமையும் விடாமுயற்சியும் வென்று விட்டது. இனி உன்னை யாரும் பழித்துப் பேச முடியாது தாத்தா உன்னிடம் கற்றக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது இனி நான் உன்னோடு தான் மீன்பிடிக்க வருவேன் என்று மனோலினும் தாத்தாவுடன் சேர்ந்து கொள்கிறான்.

நாம் எடுத்துக் கொண்ட செயலில் உறுதியாக இருந்து நாம் செயலை நோக்கி சிறிது சிறிதாக செயல்பட்டால் கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது இந்த நாவல்.

நாம் ஒரு செயலை செய்தால் நம்முடைய கவனம், இலக்கு அனைத்தும் அந்த செயலை நோக்கி இருக்க வேண்டும் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கக் கூடாது.

நம் செயலை நோக்கியே நாம் செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது.

இந்த நாவலைப் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் அப்போதுதான் முயற்சியின் பெருமைத் தெரியும்.

“உலகின் தலைச்சிறந்த சொல் செயல்” என்பதை இந்த நாவல் நிரூபிக்கிறது.

 

நூல் அறிமுகம் எழுதியவர் :

வ.பெரியசாமி

‘புத்தக ஆர்வலன்’
தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சியாளர்,
பட்டதாரி ஆசிரியர் கணிதம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,சங்ககிரி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. அறிமுகம் …பேசுகிறது என்றார் ஒருவர்!
    எப்படி என்றேன்?
    புத்தகத்தின் கேரக்டர் அப்படி என்றார்.
    படித்தேன் புரிந்தது அந்த புத்தகம் பேசுகிறது. அப்படி ஒன்றுதான் இந்த புத்தகமும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *