அஸ்வகோஸ் (Ashwaghosh) எழுதிய கடவுள் என்பது என்ன? (Kadavul Enpathu Enna) - நூல் அறிமுகம் | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) - https://bookday.in/

கடவுள் என்பது என்ன? – நூல் அறிமுகம்

கடவுள் என்பது என்ன? – நூல் அறிமுகம்

கடவுள் என்பது யார்? என்று தான் இருக்க வேண்டும். ஆனால் கடவுள் என்பது என்ன? என்ற கேள்வியிலேயே புத்தகத்திற்குள் அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.

மனித வாழ்க்கை எத்தனையோ சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன? கடவுளா?

சரி அப்படி என்றால் இந்த கடவுள் யார்? கடவுள் என்ன சொன்னார்? கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? அவர்தான் இந்த பூமியை சிஸ்டித்தாரா? கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்ற நகைச்சுவையைப் போலத்தான் இருக்கிறது இதுவும். கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?

அறிவியல் ஆயிரம் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த பின்பும் மனிதன் என்னும் பின்னோக்கியே இருக்கின்றான். ஏன் எதற்கு எப்படி இந்த கேள்விகளை கேட்டு இருந்தாலே இதற்கான விடையை நமக்கு கிடைத்திருக்கும். ஆனால் இது போன்ற கேள்விகளை கேட்க விடாமல் இருக்க நம்மை அடக்கி வைத்து விட்டார்கள்.

மூளை சிந்திக்க விடாமல் ஏதோ ஒரு தர்க்கத்தை நம் மீது சுமத்தி நம்மை அதிலிருந்து மீள முடியாமல் செய்து விட்டனர்.

முதன் முதலில் பூமி எப்படி உருவாகியிருக்கும். அதில் என்ன மாதிரியான ஜீவராசிகள் வாழ்ந்திருந்தன. அல்லது எந்த ஜீவ ராசியையும் வாழாமல் இருந்தனவா? இதையெல்லாம் நாம் என்றாயாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

உலகம் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருந்து கொண்டிருப்பது இல்லை. இப்பொழுது நாம் பார்க்கும் உலகமே ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக இது போன்று இருந்திருக்குமா என்றால் இல்லை. அப்படி இருக்கும் பொழுது பலகோடி வருடங்களுக்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்திருக்கும். அதில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் என்னென்ன? இதைப் பற்றிய கல்வி நமது பாட புத்தகங்களில் இல்லை.

இதைப் பற்றிய புரிதல் நமக்கு சிறுவயதில் இருந்து அளித்திருந்தால் மக்களை ஜாதி மதம் சடங்கு சம்பிரதாயங்கள் தீட்டு தீண்டாமை ஆண்ட பரம்பரை என எத்தனையோ அடிமைத்தனங்களிலிருந்து மீட்டெடுத்திருந்திருக்கலாம்.

உலகில் இரண்டே இரண்டு மனிதர்கள் தான். ஒன்று பொருள் முதல்வாதம் மற்றொன்று கருத்து முதல் வாதம் உள்ளவர்கள். அது என்ன பொருள், கருத்து. உலகில் உள்ள அத்தனை பொருட்களுமே நம் கண்ணால் பார்க்கக்கூடிய அனைத்துமே பொருள் தான். மரம், செடி ,கொடி, சூரியன் நிலா நட்சத்திரங்கள், மண், இரும்பு என அனைத்துமே பொருள்தான். இந்தப் பொருள்களில் இருந்து நமக்கு கிடைக்கக்கூடிய பானை, மண்வெட்டி, மரப் பொருட்கள் என அனைத்துமே பொருட்களில் அடங்கும்.

மனிதன் மண்ணிலிருந்து பானையை செய்தான் இரும்புலிருந்து மண்வெட்டியை செய்தால் மரங்கள் இருந்து மர சாமான்களை செய்தான். இவையெல்லாம் ஏற்கனவே செய்து வைத்தனவா என்றால் இல்லை. மனிதன் தன்னுடைய சுய அனுபவத்திலிருந்து சுய சிந்தனையில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருட்கள் தான். அப்படி உருவாக்கப்பட்ட பொருட்களுக்கு தேவையான மனிதனின் சுய சிந்தனையே கருத்து எனப்படும்.

ஆக பூமியில் ஒன்று பொருள் வாதமாகவோ அல்லது கருத்து வாதமாகவோ இருக்க வேண்டும். இதற்கிடையில் கடவுள் பொருளா கருத்தா? கடவுள் என்பவன் பொருளாக இருந்திருந்தால் மனிதனின் கண்களுக்கு புலப்படுபவனாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை அவன் கருத்தாக இருந்திருந்தால் அது மனிதனின் சிந்தனையிலிருந்து உருவாகி இருக்க வேண்டும்.

கடவுளை இதுவரை யாரும் கண்களால் பார்த்தது இல்லை. அப்படி இருக்கும் பொழுது கடவுளுக்கு வெவ்வேறு உருவங்களை அடித்து எப்படி வணங்குகிறோம் என்று கேள்வி வரலாம். மனிதனின் சிந்தனை அளப்பரியாதது. அவன் சிந்தனையில் உருவாக்கிய பானை மண்வெட்டி மரச்சாமான்களை போலவே கடவுளையும் அவனுடைய சிந்தனையால் உருவாக்கி இருப்பான்.

சரி கடவுளுக்கு உருவம் இல்லை அதனால் அவன் ஒரு கருத்தால் உருவாகி இருப்பான் என்று வைத்துக் கொள்வோம். ஏன் மனிதன் இவ்வாறு ஒரு கடவுளை உருவாக்கினான். அவனுக்குள் இருக்கும் ஒரு வித பயம் சோகம் மகிழ்ச்சி ஏதோ ஒரு உணர்வை உன் கடத்துவதற்காக உருவாக்கப்பட்டதாக இருந்திருக்கலாம்.

மேலும் அரசர்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் கடவுள் ஒரு தேவையாக இருந்திருக்கலாம். தினம்தோறும் வாடும் தொழிலாளர்களிடம் அவர்களின் கல்வியை மறுக்கப்பட்டு அவர்களுக்கான சிந்தனையை கொடுக்கப்பட்டு அவர்களை ஒருவித பக்தி பரவசத்திலேயே அடை படுத்தப்பட்டு அரசர்களுக்கும் முதலாளிகளுக்கும் அவர்களுடைய வருவாயை அல்லது அவர்களுடைய நிலைப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்ள அவர்கள் கொண்டு வந்த ஒரு மாய வலையாக இருக்கலாம்.

இடைவிடாது எரிந்து கொண்டிருக்கின்ற சூரியனிலிருந்து சிதறிக்கப்பட்ட சிறு பிழம்புகள் தான் இந்த அப்படித்தான் சூரியனிலிருந்து வெளிவந்த ஒரு சிறு பகுதியே பூமி.பூமியை சுற்றி சூரியன் சுழல்கிறது என்றனர். பின்னர் வந்த அறிஞர்கள் சூரியனைச் சுற்றி தான் பூமி சுழல்கிறது என்பதை கண்டறிந்தனர்.

பூமி தட்டையாக இருக்கிறது என்றனர் ஆரம்ப காலங்களில். பின்னர் பூமியானது உருண்டை வடிவில் உள்ளது என கண்டுபிடித்தனர். இது போன்ற அறிவியல் ஆய்வுகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றன.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மரம் செடி கொடிகள் புழு பூச்சிகள் பறவைகள் விலங்குகள் என எதுவுமே இல்லாத ஒரு ஒரு உலகம். அது எப்படி இருந்திருக்கிறது நெருப்பு கோலமாக இருந்திருக்கிறது.

அந்த நெருப்பு கோலத்தின் இயக்கத்தின் போது தோன்றுகின்ற மாற்றங்களே இப்பொழுது நாம் இருக்கும் இந்த உலகம்.

சூரியனிலிருந்து வந்த ஒரு சிறு பகுதி பூமி ஆதலால் சூரியனைப் போன்று பூமியும் வெப்பம் மிகுந்த பகுதியாகவே இருந்திருக்கிறது. இவ்வளவு வெப்பம் இருக்கும்போது மனிதர்கள் எப்படி வாழ முடியும்?

ஒரு நாள் இரண்டு நாட்களாக நடந்த மாறுபாடு அல்ல. பல வருடங்களாக மழை பெய்து அந்த மழை நீரால் பூமியானது (பூமியின் மேற்பகுதி மட்டுமே குளிர்ச்சி )அடைகிறது. சரி பூமியே உருவாகாத அந்த நேரத்தில் மழை எப்படி வந்தது . குளம் குட்டைகளை இருந்திருக்காதே பின்பு எப்படி சாத்தியம். அப்பொழுது நம்மையும் மீறிய ஒரு சக்தி கடவுள் தான் மழையை தெரிவித்து இருப்பார் என்ற ஒரு எண்ணம் தோன்றும். அதற்கும் அறிவியலில் பதில் உண்டு.

வளிமண்டலத்தில் ஆக்சிஜன் ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் இயற்கையாகவே இருக்கின்றன இவற்றின் கூட்டு சேர்க்கையினால் h2o நீர் மூலக்கூறுகள் உருவாகி மழையை பெய்ய வைத்திருக்கின்றனர்.

இதுபோன்று நமது கண்ணனுக்கு தெரியாத எத்தனையோ அறிவியலை அறிவியல் அறிஞர்கள் நம் கண் முன்னே கொண்டுவந்து சேர்த்து இருக்கின்றனர். இன்றும் நாம் அறிவியலை பின்னோக்கி ஆன்மீகத்தை முன்னோக்கி கொண்டு செல்வது நம் முட்டாள் தனம் தான்.

கடவுளின் பெயர் சொல்லி யாரெல்லாம் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்தான். மார்க்சியம் சொன்னது போன்று உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள். விஞ்ஞானம் மெய்ஞானம் எல்லாம் ஒன்றுதான். நம்மை முட்டாள்கள் ஆக்குவதற்காகவே விஞ்ஞானம் ஆனது விஞ்ஞானத்திற்கு எதிரானது என்ற பரப்புரையை பரப்பி இருக்கின்றனர்.

சிந்தித்து செயல்படுவோம். சிந்தனையில் பல நல்ல கருத்துக்களை புகுத்திடுவோம்.

நூலின் தகவல்கள் : 

புத்தகம் : கடவுள் என்பது என்ன? (Kadavul Enpathu Enna)
ஆசிரியர் : அஸ்வகோஸ் (Ashwaghosh)
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
பக்கங்கள்: 176

நூலின் தகவல்கள் : 

நளினி மூர்த்தி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *