காடு கவிதை – கலா புவன்

காடு கவிதை – கலா புவன்




பகலின் இருட்டு
மரங்களின் அடர்த்தி
அருவிகள் தொடங்குமிடம்
நகரங்களின் முன் ஜென்மம்
காடு

மனிதன் காட்டிற்கு அன்னியமானவன்
மரங்களை அழித்து ஊர்களை உருவாக்கினான்

மனிதனின் ஆசைகளுக்கு அளவேயில்லை
காடு என்ன பாவம் செய்தது ?

காடுகள் அழிக்கப்பட்டன
நிலங்களை கூறுபோட்டு விற்றனர்

காடு குறையக் குறைய மழை நின்றுபோனது

நாடுகளின் வயல்கள் வறண்டு போயின
காட்டு மரங்களை அழித்து காகிதம் செய்தான்

படித்த புலவர்கள் காடுகளை காப்போம்
என்று புத்தகங்கள் எழுதி வெளியிட்டனர்
இதுவே
ஒரு பெரிய முரண்பாடு

நெகிழி நாற்காலிகளை விட மர நாற்காலிகள் சிறந்தவை
மரக்கட்டில் பாட்டிக்கும்
மரபொம்மைகள் குழந்தைகளுக்கும்
மரமேசைகள் குடும்பத்திற்கும்
உகந்தவை

முன்னாளில் அடுப்பெரிக்க
மரங்கள் பயன்பட்டன

மரங்கள் எரிப்பில்
வியாதியற்ற சாப்பாடு வீட்டிற்கு உதவியது

காடுகளை அழித்து ,எரித்து நிலக்கரி தயாரிக்கின்றனர்
நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர்

எப்படியோ புலிகளைப் போலவே
காடுகளும் உலகில் குறைந்து விட்டன

காடு வளர்ப்போம்
காட்டைக் காப்போம் என்ற
வெற்றுக்கோஷம் மட்டும்
விண்ணளவு முழங்கப்படுகிறது

அய்யகோ இதென்ன பெரும் கொடுமை ?

இனியாவது விழித்துக் கொள்வோம்
இருக்கும் காடுகளை பாதுகாப்போம்

ஆமென்

கலா புவன் -லண்டன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. babu

    பகலின் இருட்டு
    மரங்களின் அடர்த்தி
    நகரங்களின் முன் ஜென்மம்
    காடு

    arumai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *