கலா புவன் கவிதைகள்

கலா புவன் கவிதைகள்

நிழலும் நிஜமும்
நிழலின் ஒளியிலே நான் நடக்கிறேன்
உயிர் உறையும் பனியின் காற்றில் மனிதநெடியின் வாசம்
குண்டுகள் குவலயத்தை தீக்கிரையாக்கிய நெடி
மனிதம் உருவழிந்து போயிற்று

புள்ளினங்கள் மடிந்து போயின
குழந்தையின் அலறலும்
ஆந்தையின் அலறலும் நடுநிசியைக் கிழித்தன
மனிதனின் இருப்பின் நிலை கேள்வியானதோ
கேவலத்தின் உச்சம் ஆக மனிதன் ஆனானோ?
அவலங்களின் மொத்த வடிவமே அகிலந்தானோ?

தீச் செயல்கள் படையெடுக்க தீய்ந்தது மானிடந்தானோ ?
அரசும் மக்களும் எதிர் எதிர் பாதைகளில் பயணித்தல் கொடுமையன்றோ?
சிவப்புக் குருதிநதிகள் தெருக்களில் ஓடுகின்றன
உவப்பு வாழ்க்கை எங்கோ ஓடிவிட்டது
மேகங்கள் பொழியும் மழை கண்ணீராய் மாறிவிட்டது

இந்நிலை எந்நாளும் என்றால்
உயிர்கள் இல்லா உலகே
நிதர்சனமாகும்
தீப்பந்தங்களின் கொடூரத்தால் குழந்தைகள் மடிந்து போகும்
துப்பாக்கி ஓசைகள் நாட்டின் இசையாகும் அவலம் அரங்கேறும்
அய்யகோ அய்யகோ மானுடம் இங்கே அழிந்தம்மா

*************************************************
மேகத் திரைக்கு பின்னால் இரு சந்திரன்கள்
ஒன்று சிவன் தலையில்
இன்னொன்று வானத்தில

கைலாயத்தின் பொற்கிரணங்கள்
வெண்பனி மலையில் பணியை சாரல் நதியாக்குகின்றன
மேகலையின் இடை நெகிழ்ச்சியில்
அன்பு ஊற்றெடுக்கிறது

எங்கிருந்தோ வரும் சூலாயுதம்
கைலாயத்தின் பள்ளத்தாக்கை
ஊடுருவிச் செல்கிறது
சிவப்புக் குருதி பொங்கி வழிகிறது

நந்தவனத்தின் பூ வாசனை
உலகத்தை வாசமாக்குகிறது
நீல நிற ஆகாயம் விண்மீன்களை பார்த்து
கண்சிமிட்ட சொல்ல

அவை தப்பாது
அப்பணி தனை
செய்கின்றன
அகிலத்தில் ஆனந்த லீலா விநோதங்கள்
அதிசயப் பூக்களாய் பூக்கின்றன

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 3 Comments

3 Comments

  1. Arunthathy gunaseelan

    மனித அவலங்களைச் சொல்லும்.மனிதநேயத்தை வளர்க்கும் கலாவின் அற்புதமான வரிகள்

  2. P. Williams Antony

    அவலங்களின் மொத்த வடிவம் தான் அகிலம்.. மனிதம் குற்றுயிராய்க் கிடக்கிறது.. இதுபோன்ற படைப்புகளே இன்றைய தேவையென்கிறேன்.. நன்று.

  3. P. Williams Antony

    அவலங்களின் மொத்த வடிவம் தான் அகிலம் ஆனதோ.. உண்மை.. மனிதம் குற்றுயிராய்க் கிடக்கிறது.. இதுபோன்ற படைப்புகளே இன்றைய தேவையென்கிறேன்.. நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *