1.
மூடியே பழக்கிய
சாளரத்துக்குத்தான்
எவ்வளவு ஏக்கம் இருந்திருக்குமோ
எத்தனை நாள்தான்
பார்த்து மட்டும் காத்திருக்கும் ஒருநாள் வெளிப்பட்டுத்தானே
ஆக வேண்டும்
உருகிக் கொண்டே இருக்கிறது
பனித்துளியுடன் கூடி!
2.
என்னைத்தான்
வெண் காலையிலும்
பொன் மாலையிலும்
ஒளிந்து மறைந்து வர வைக்கிறாய்
உச்சிப் பொழுதில் கிறக்கத்தில் உருகடிக்கிறாய்
ராத்திரியில் போரத்தித் துரத்தி விடுகிறாய்
ஒரு பொழுதேனும்
ஒட்டி வர விட மாட்டேன் என்கிறாய்
உன் நிழலையுமா….
நிஜமில்லாமல்
நிழல் எங்கே போகும்?
3.
துரத்திப் பிடித்துக் குதித்து
மகிழ்ந்தேன்
பட்டாம்பூச்சியை.
என் கொட்டமடங்கியது…
அதன் கொண்டாட்டத்தை
மறந்துவிட்டோமென்று!
4.
அடி வானம் கும்மிருட்டானதுமே
வந்திருக்கலாம்
பாழாய்ப்போன நிலவும்
உப்பாய்க் கரைந்தபோதே நகர்ந்திருக்கலாம்
தான் …
குத்துக்காலிட்ட குடும்பத்தை நிமிர்த்த
பார்வையில்லாமல் பாதையில் பத்தி விற்று
மணம் வீசியவரை மரணமாக்கியது
செருக்கில் சுற்றும் கிறுக்குகளின்
நெருப்பொளி வீசி விரைந்து பறந்த வாகனம்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.