1.
காத்து வாக்குல
சுற்றினாலும்
குளிரீரத்தை மெதுமெதுவாய்
பருகி கொண்டே புரள்கிறது
குளுமையை உறிஞ்சி
சுகம் காணுகிறது
ஆனால்
எரியும் நெருப்புப் பூக்களை
மட்டுமே
ஆணியாய் அடிக்கிறது
அக்னி வெயில்…
2.
நிர்வாணமாய்த்
திரியும் வெயிலை
கருணை கலந்த
ஒருதலைக் காதலோடு
மரங்களின் ஒத்தாசையுடன்
கருப்புடை உடுத்தி விடுகிறது
நிழல்…
வெயில் ஏனோ
அப்படியே திரிகிறது இன்றும்!
3.
திரும்பவும்
ஏமாற்றப்பட்ட நினைவே இவ்விடங்களில் திரும்பி வந்து போகிறது
ரேசனில் பொருள் வாங்க காத்திருந்த பல மணிநேரம்..
பள்ளியில் பாலகன் சீட்டுக்கு குடியிருந்த சில நாள்..
தாலுகா அலுவலகத்தில் அன்றாடம் அலைந்து போன பொழுது..
அரசு மருத்துவமனையில் மருத்துவத்திற்காய் மயங்கி
விழுந்த விநாடி..
ஓட்டுப் போட்டு
காலம் மட்டும் கடந்து போனதால்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

