காதலையே இன்னும் எத்தனை காலம் பாடிக்கொண்டிருப்போம்?
எங்காவது எவராவது காதலிக்கத்தான் செய்வார்கள்
நாம் பாடாது விட்டாலும்
உதிப்பதும் மறைவதும் உதிர்வதும்
மலர்வதும் கூட
எவர் அதைப் பாடாது விட்டாலும்
நடக்கும்
பாடாது விட்டதால் இயற்கை
தன் இயல்பை மாற்றிக் கொள்ளுமா என்ன?
வர்ணாசிரமம் என்னும் வக்ரம்
இன்று வரிசை கட்டி நிற்கிறது
வர்க்க வித்தியாசமோ வானத்தைத்
தொட்டுப் பார்க்கிறது
உழுதவனை தொழுத காலம்
உயிரிழந்தே போய் விட்டது
சமூதாய வீதியிலே எத்தனையோ
சவக்குழிகள்!
சற்றாவது யோசிப்போம்
நாம் இது வரை
செய்தது சரிதானா?
கலை கலைக்காகவா?
இல்லை…… கலை வாழ்க்கை எனும்
போராட்டக் களத்திற்காகவா?
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

