வெண்பனியே
வெள்ளிப் போர்வையோ
வைரத் துளியோ
மழைச்சாரலோ
மலையருவி தூரலோவென
கொஞ்சியது போதுமென்று
போகாமல்
சளிப் பிடித்திருக்கென
உழற வைத்து
பிஞ்சு பிள்ளைகளின்
முனகலில் முகம் மலர்வதை
நிறுத்திக் கொள்
முள் பனியே!
– கலை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

