வெங்கொடுமைச் சாக்காடில்
விழவைத்தார் அன்றொருநாள்
பெண்களும் குழந்தைகளும்
வீழ்ந்தது போல்
துடித்தார்
துவண்டார்
மடிந்தார்
மரணமுற்றதே மனிதநேயம்
ஆண்டோரின் கொடுங்கோலாட்சி
அனைவரையும் ஓடவைத்தது
வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிமாண்டார்
மாளவைத்த மன்னராட்சி
அரக்கர்களின் அநியாய பிரதிபலிப்பு
வாய்க்கால் கரையோரம்
வசந்த தலைவனையே வீழ வைத்து
நோகடித்துச் சாக வைத்தார்
திக்கெட்டா நெடுந்தொலைவில்
தெறித்தோடி சென்றவர்கள்
உகுத்த கண்ணீர் பெருவெள்ளம்
வரலாறு திரும்பிற்று இன்று
பெருவலி தந்தவர்கள்
பெருத்த அவமானத்துடன் ஓடுகிறார்
திக்கேதும் அறியாமல்
தீவு தேடி ஒழிகின்றார்
இரத்தக் கண்ணீரே திரும்பிய பக்கமெல்லாம்
நிகர்தெளுந்து ஓடுகிறது
மனிதநேயம் அறியாதோர்
மன்னிப்புத் தேடியே
மன்பதையில் அடைக்கலம் நாடியே
மனுக்கள் பல விடுக்கின்றார்
அந்தோ பரிதாபம்
அனைத்துலகும் மெளனித்து
அலட்சியமே செய்யும்கால்
ஆண்டவனின் நீதியின்று
ஆழமாய்க் கோலோச்சுது
காலத்தின் தீர்ப்பு இதுவே
கடவுளின் தீர்ப்பும் இதுவே
ஆமென்
கலா புவன் – லண்டன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.