களவு போன என் புத்தகத்தைத்
தேட எனக்கு மனமில்லை;
அது பழைய புத்தகக்கடைக்கு
விலை போன
விஷயம் தெரியாத வரை எனக்குக் கவலையும் இல்லை.
அங்காவது யாராவது படிக்க மாட்டார்களா என்ற என் ஆசைக்கும் குறைவில்லை.
கழுதையாகப் பிறந்தாலும் புத்தக மூட்டையைத் தவிர எதையும் தூக்க எனக்கு விருப்பமில்லை.
கரையானாகிப் போனாலும்,
வெற்றுத் தாளில்
எனக்கு வேலை இல்லை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

