மனுஷ்ய ஜாதியின் விடுதலை, தேசியக் கல்வி – இவ்விரண்டு பெருங்காரியங்களைத் தொடங்குவதற்கு இப்போது காலம் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது என்று விடுதலைப் போராட்டத்தையும், தேசியக் கல்வியையும் இணைத்துச் சிந்தித்தவர் பாரதி. ஆசிரியர்கள், மலைகளாகவும், அணைக்கட்டுகளாகவும் விளங்கவேண்டும், அப்போது மாணவர்கள் ஆறுகளாகப் பெருகுவார்கள், சாஸ்திர நன்செய்கள் சாலவும் பயன்படும் என்பது அவரின் நம்பிக்கை. நூல்களை எல்லாம் பாடசாலைகளில் தமிழ்மொழி வாயிலாகவே கற்பிக்க வேண்டும்.

Bharathiyar Thoguppu
Posted inUncategorized
