யுகங்களின் சூரியக்கதிர்கள்
அவள் மேனியில் விதைத்த
வேர்வையின் துளிகள் பெருகி
அலைகளாயின.
அடங்காத அலைகளுக்கு அடியில்
அவள் பனிக்குடம் நிரம்பி
பூமி பிரசவிக்க ஆரம்பித்தது.
அவள் கடற்கரைக்கு வந்தாள்.
பட்டினப்பாக்கம் அசதியில்
தூங்கிக்கொண்டிருந்தது.
கானல்வரி பாடிப் பிரிந்தவர்கள்
சந்திக்கவே இல்லை.
உடைந்து கிடந்த யாழின் நரம்புகளில்
துடித்துக்கொண்டிருந்தது
இன்னும் பாடாத பாடலின் இசை.
பறந்தலை அவள் நரம்புகளைக் கிழித்து எறிந்து
கருப்பையில் பசியாறிக்கொள்கிறது.
உழிஞை மரத்தடியில்
அவள் இப்போதும் காத்திருக்கிறாள்.
புதியமாதவி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.