கனவு ஆசிரியர் (Kanavu Asiriyar) – நூல் அறிமுகம்
*ஏரி முழுக்க ஆசிரியரே*
*ஒற்றைப் படகை*
*செலுத்துவதை*
*யார் விரும்புவார்?*
*கரையிலிருந்து*
*வேடிக்கை பார்ப்பதற்கா*
*மாணவர்கள்??*
ஏராளமாய் சிறு சிறு படகுகள் மிதக்கும் ஏரியைத் தான் கனவு காண்பதாக *பெருந்தகை ச. மாடசாமி* அவர்கள் எழுதிய கடிதத்தில் இதயம் இனிக்கிறது.
அவரது கனவு ஆசிரியர் ஆற்றல் மிகுந்தவர் அல்ல!!
*சராசரியானவர் தான்*
ஆனால் எல்லா காரியத்திலும் சலிப்படையாமல் தன்னை நகர்த்தி போகும் பொறுமைசாலி. வகுப்பறையை எளிய திறமைகளின் சந்திப்பாக மாற்றுவவர்கள் தான் கனவு ஆசிரியர் என்பதில் சந்தேகமில்லை.
என் உழைப்பை மாணவர்களின் தலைசுமையாக்காமல் அவர்களின் இறக்கை ஆக்கி வகுப்பு முழுக்க அவர்கள் பறப்பதை பார்த்திருக்க வேண்டும் என அவர் கோட்டை விட்டது இதுவென நினைவுபடுத்தி அதன் பின்னர் வரும் பத்திகளில் நம்மை புல்லரிக்க வைத்துள்ளார்.
*புத்திசாலிகளும் புத்திசாலிகள் என தங்களை நினைத்துக் கொண்டோரும்தான் வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்க்கும் இடையே இடைவேளை உண்டு பண்ணி விட்டார்கள்* என்பது அய்யா மாடசாமி அவர்களது கருத்து. கலங்கிய கண்களை கண்டுபிடிப்பது முக்கியமானது என்ற கடிதத்தில் மனதோடு உரையாடியுள்ளார். உண்மைதான் இன்று கடிதப் போக்குவரத்து என்பதே இல்லை!!
செல்போன் வந்த பிறகு Over பேச்சு வந்துவிட்டதுதான்.
தானாக பேசிக்கொண்டு தெருவில் அலைவோரும் , ஏதோ புது மொழி பேசுவது போல தமக்குள்ளே பேசிக்கொள்பவரையும், எவருக்கும் கேட்டிடாமல் சந்தோரம் அமர்ந்து குசுகுசுக்கும் ஆட்களையும் பார்த்ததுண்டு. ஆனால் பேராசிரியர் 3 கடிதத்தில் கனவு ஆசிரியரைப் பற்றி பல கனவுகளை தந்துள்ளார்.
*ஒவ்வொரு ஆசிரியரை முகத்திலும் கனவு ஆசிரியரைத் தேடுகிறேன்* என்ற தலைப்பில் தோழர் *ச.தமிழ்செல்வன்* அவர்கள் பதிவை ஆழ வாசிக்க முடிந்தது.
நமது வகுப்புக்கு வந்து சேரும் பிள்ளைகளை பற்றி மட்டும் கவலைப்படும் நாம், Fail ஆகி புறக்கணிக்கப்பட்டு அடுத்த வகுப்பு வராமல் போன எங்களை எல்லாம் …
எங்கே போனார்கள் அவர்கள்?? என்று தேடுவீர்களா டீச்சர்? என்று குழந்தைகள் கேட்டதை நினைவுறுத்தி பார்பியானோ பள்ளி மாணவர்கள் எழுதிய
A LETTER TO TEACHER என்ற புத்தகத்தில் புத்தியில் செலுத்த வைத்துள்ளார்.
டிசம்பருக்குள்
போர்ஷன் முடித்து ,
ஆண்டு இறுதித்தேர்வில்
எல்லா பிள்ளைகளையும்
பாஸ் பண்ண வைத்து,
அதிலும் பள்ளிக்கு
பெருமை சேர்க்கும்
படியாக பாதி பேராவது
90 சதமான மார்க்
எடுத்தாக வேண்டும்
என்கிற பதட்டத்தை
எல்லாம் தாண்டி
என் கனவு ஆசிரியரை
தோழர் தேடுகிறார். முகத்திலும் பேச்சிலும் செயலிலும் கனவு ஆசிரியரை தேடும் பெருந்தகை அவர்கள் ஒருவேளை காணாதபோது முகத்தை வேறு பக்கம் திரும்பவும் தயாராக உள்ளார்.
அவரது இரண்டாம் வகுப்பு *ஆதிலட்சுமி டீச்சர்* அவரது அம்மா உணர்வை நினைவு படுத்தியதும், எல்லோருக்கும் பொதுவானவர் என்ற நிலையை தவறியதால் மனம் உடைந்ததாக பதிவிட்டுள்ளார்..
*நாலாம் வகுப்பு கணக்கு வாத்தியார் ராதா* அவர்களையும்…
*பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் எடுத்த அயப்பன் சாரை* மகர ஜோதியின் விளக்கத்தை கூறி அறிவியல் கோர்ட் வாசலில் நிறுத்திய விதமும்,
மனதை மண்டியிடச் செய்கிறது.
இவர்கள் கனவு ஆசிரியர் என்பதில் சற்று சந்தேகம் தான். ஆனால் கண்ணாம்பா டீச்சர் திருமங்கை ஆழ்வார் சார் போன்றவரின் செயல்களையும் அவர் காட்ட தவறவில்லை.
மதிப்புமிகு *ஆர். பாலகிருஷ்ணன்* அவர்கள் எடுத்துரைப்பது போல யார் கனவாசிரியர் என்ற தலைப்பில் மனதில் தட்டச்சு செய்யப்படுகிறது அனைத்து நண்பர்களும் வாசிக்க வேண்டிய நூல் இது.
நூலின் தகவல்கள் :
நூல் : கனவு ஆசிரியர்
தொகுப்பாசிரியர்: திரு.க.துளசிதாசன்
விலை: ரூ. 90
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/kanavu-aasiriyar/
நூல் அறிமுகம் எழுதியவர் :
யாழ்.மாரி
ஆடுதுறை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.