Karkavi Poems 2 கார்கவியின் கவிதை 2

கார்கவியின் கவிதைகள்




தாழ்ப்பாளின் ஓசை
************************
தலை நிரம்பிய மல்லிகை
முகம் நிறைந்த புன்னகை
பெட்டி நிறைந்த உயவில்
பல கிலோமீட்டர்களைக் கடக்கிறது

இன்பங்களை வார்த்தைகளாய்
போகும் வழியெல்லாம்
சிந்திக் கொண்டே நகர்கின்றன
கணவன் மனைவியின் அன்யுன்யம்….!
செல்லும் இடமெல்லாம் வணக்கங்களும் வாழ்த்துகளும்
அதனூடே ஒட்டிக் கொள்கிறது
வந்தவர் போனவரெல்லாம்
எதிர்பார்க்கும் கணவன் மனைவியின் இடையையும் தோளையும் நிரப்பிடும்
மழலை வேண்டலின்
குத்தல் வரிகளை
ஓயாமல் கேட்டுக் கொண்டேதான்
இருக்கிறது
இன்பமும் மன உளைச்சலும்
ஒன்று சேர விடைபெறும்
மனம் குமுறும் தாழ்ப்பாளின் ஓசை…!

கோபுரக்கவி
****************
நீ
இருப்பது என்னுள்
யாரோடு வினவி செல்வேன்
இங்கு நானாகிய
நீ
புரிதல்
இல்லாத மனமாய்
இதயம் கனக்கிறது எங்கோ
இணையம் கொடுத்த
புரிதல்
கடல்
உயிரோடும் உடலோடும்
நீர் நிறைந்து இருந்தும்
தொட்டும் தொடாமல்
கடல்
கதிரே
நீ சிந்திய
துளிகளில் பற்றிடும் பசியாய்
இடறி விழுந்த
கதிரே
இதயம்
திறந்திட மனம்
இல்லாத புது இருளில்
மின்மினி ஒளியாய்
இதயம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *