Karkaviyin Kavithaigal 14 கார்கவியின் கவிதைகள் 14

கார்கவியின் கவிதைகள்

பெண் சுதந்திரம் அறிவோம்
**********************************
பெண்ணிற்கு சுதந்திரம் என்பது எல்லா இடங்களிலும் பேசலாம், ஆனால் எப்படி பேசவேண்டும்,என்ன பேசவேண்டும் எந்த விதத்தில் பேச வேண்டும் என்பது அறியாமல் பேசும் பெண்கள் பெண் சுதந்திரத்தை பற்றி பேசும் தகுதியை இழக்கின்றனர்…
ஆடை சுதந்திரம் பெண்ணை போற்றும் படி இருக்க வேண்டும்….!
பேச்சில் சுதந்திரம் பிறர் மனம் கவலைக் கொள்ளாத நிலையில் இருத்தல் வேண்டும்…..!
அனைத்திலும் சுதந்திரம் தேடும் பெண்… அனைத்தையும் நல்வினையில் சாதிக்கும் எண்ணம் கொண்டிருத்தல் வேண்டும்…

சுதந்திரமும் வேண்டும்…
சுற்றமும் தவறாக எண்ணும் அளவிற்கு இருத்தல் வேண்டும் என்றால் எவையும் சரியாகாது….!
வாழ்க்கையை வட்டத்திற்குள் வைக்க வேண்டாம்…
வழிமுறைகளை சரியாக கையாண்டால் போதும்…

பெண்மை..
பல இடங்களில் போற்றப்படுகிறது…!
பல இடங்களில் தூற்றப்படுகிறது…!

ஒவ்வொரு புள்ளியும் முற்றுப்புள்ளியே..!
***********************************************
அதீத தேடலில் நமது மனம் ஒருவரை வெறுக்கும்..
பலரை ஏற்கும்…!
மனித மனம் குரங்கின் பரிமாணம் எப்படியும் பழம் தீர்ந்தபின்பு அடுத்த மரம் பாய்ந்தே தீரும்….!

இருக்கும் வரை இனிக்கும் உறவுகள்..
சில நேரங்களில் இல்லாமை வருத்தம் சார்ந்த இன்ப கவலைகளே….!

நல்லவரை தீயவராக மிகை புரிந்தால் அவர் எவ்வகை நன்மை செய்தினும் தீயவனாகவே அனைவருக்கும் தோற்றமளிக்கிறார்…
தீயவரே ஆனாலும் நன்மை செய்வதை கண்டுவிட்டால் அவர் எத்தீமை செய்யினும் நன்பெயரை பெற்றுக்கொண்டே இருப்பார்….

ஒவ்வொரு சூழலிலும் நமக்குள் உண்டாகும் தயக்கம்…!
ஏதோ ஒரு நல்லதை நாம் தள்ளிபோடும் நிலைக்கு கொண்டு செல்லும்…
மனம் அறியாத பக்கங்கள்….

நேரம் வரும்
****************
நீண்ட நேரமாக வண்டியை உயவினைத் தூண்டும் மனிதனின் வியர்வை சோர்வில் அழுகிறது,
விழி பிதுங்கும் கண்ணீரில் அழுகிறது…!

அதைப் பார்த்துகொண்டே செல்லும் சாலைப்பயணி அருகில் சென்றதும. சற்று குணிந்து சில அடிதூரம் கடந்து தலையை நிமிர்த்துகிறார்…!
யாரும் காணாதது போல் திரும்பிக்கொண்டும், அலைபேசியை காதினில் அடைத்து திணித்துக்கொண்டும் நகர்கிறார்கள்..!
அனைத்தையும் பார்த்து சலித்த அந்த நபர் கோவத்தில் உதைக்கிறார் உயவுபொருள் இயந்திரத்தில் வழிக்கு வந்தது…

என்னவென்றெ அறியாத குழந்தை அருகில் வந்து தாத்தா நான் தள்ளிவிடவா என்றது…
அன்பில் நிறைந்த மனிதம் நம்மைத் தேடி வரும்..
அதற்கான நேரம் வரும்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *