Karunya Kanavugal Poem By Vasantha Dheepan. வசந்ததீபனின் காருண்ய காலக் கனவுகள் கவிதை

காருண்ய காலக் கனவுகள் கவிதை – வசந்ததீபன்




அழகான கனவுகள்
நெய்யப்படுகின்றன
இதயங்கள் தோறும் வானவில்
குடிகாரர்களைக் கண்டால்
கண்ணீர் வருகிறது
பாவம் தங்களைத் தாங்களே
எரியூட்டிக் கொள்கிறார்கள்
ஆனாலும் அவர்கள் மேல்
இரக்கப்பட முடியவில்லை
மெளனத்தில் புதைந்து போவது…
மரணத்தின் வாசலுக்கு அருகில்
மண்டியிட்டு பிரார்த்திப்பது
இன்று நீ
நாளை நான்
மரணத்தின் வாயில் அடைபடுவதில்லை
புனிதத்தை உடைப்பதற்கல்ல
பாவத்தை கட்டமைப்பதற்கல்ல
சத்தியத்தை விளைவிப்பதற்கே
நேசம்
போர்வையாய் உபயோகிக்கிறான்
செருப்பாய் பயன்படுத்துகிறான்
சக ஜீவியாய்
அவளை அவன்
எப்போதும் நடத்துவதில்லை
அழகான கனி
அறுத்துப் பார்க்கிறேன்
புழுக்கள் மயம்
மண்ணில் பிறந்த தேவதை
மனதில் குடியேறினாள்
வாழ்க்கை சொர்க்கலோகமானது
அழகான உலகம்
அழகான வாழ்க்கை
அசிங்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்
உன் தாகம் தீர்க்க
ஜீவநதியாய் ஓடிவருகிறேன்
அணைகட்டி தடுக்காதே
இதழ்கள் நீட்டி எதிர்கொள்
கற்பாறைகள் கண்விழிக்கின்றன
பசும்புற்கள் பாடுகின்றன
கருணையைப் பொழிகிறது மழை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *