உயிர் மெய் கற்ற பள்ளியில்
ஆய்த எழுத்தோடு சேர்த்து
ஆயுதமும் கற்றுக் கொள் மகளே..
கல்விக் கூடமாக இருந்தது
கலவிக் கூடமாக மாறுவது
கண்டு பயந்திடாதே மகளே..
பாரதி கண்ட புதுமைப்பெண் நீ
பாரதியை தான் காணவில்லை
துணிந்து எழு மகளே..
தாய் தந்தையின் உழைப்பும்
அவர்களின் கனவும் நீ தானே
தளர்வுறாதே மகளே..
இறக்கையை விரித்திடு
பட்டாம்பூச்சியாய் அல்ல
கழுகினைப் போல மகளே..
நீ இன்று ஒடுங்கினால்
உன் சந்ததியும் நாளை ஒடுங்குமே
முன்னேற வா மகளே..
தவறுகளைத் தவிடு பொடியாக்க
கயவர்களைத் தட்டிக்கேட்க
கசடற கற்றிடு மகளே..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

