சிறுகதை: கசுமலா காக்காவின் குஞ்சுகள் (Kasumala Kakkavin Kunjukal Story) | மலையாளத்தில் - அஷீதா (Ashitha) | தமிழில் - உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: கசுமலா காக்காவின் குஞ்சுகள் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை: கசுமலா காக்காவின் குஞ்சுகள்

மலையாளத்தில் – அஷீதா
தமிழில்- உதயசங்கர்

 

கசுமலா காக்காவின் முட்டைகள் பொரிந்து விட்டன என்று பூனைக்குட்டி வந்து சொன்னது. சின்னுவும், நாய்க்குட்டியும் மெகர்பா கோழியும், பூனைக்குட்டியும், கல்யாணிப்பசுவும் கசுமலா காக்காவின் குஞ்சுகளைப் பார்ப்பதற்காகப் போயிருந்தார்கள். கசுமலா காக்கா மூன்று குஞ்சுகளையும் அறிமுகம் செய்தது.

மூத்தது ஷாரூக், இரண்டாவது சல்மான், மூன்றாவது பெண்குஞ்சு கஜோல் என்று பெயரிட்டன. அவை எல்லாம் குஞ்சுகளைப் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது கசுமலா காக்காவும் கூடவே வந்தது. அப்போது பதுங்கியிருந்த ஒரு நரி குஞ்சுகளைக் கூப்பிட்டது.

“ ஷாருக் கண்ணு நான் நரி மாமா வந்திருக்கேன்.. கதவைத் திற..” என்றது. எந்த சத்தமும் இல்லை. யார் வந்தாலும் கதவைத் திறக்கக்கூடாது என்று கசுமலா காக்கா கட்டளையிட்டு விட்டுப் போயிருந்தது.

நரி மீண்டும்,

“ சல்மான் கண்ணு கதவைத் திற..” என்றது. அப்போதும் எந்தச் சத்தமும் இல்லை.

“ கஜோல் கண்ணு நீயாவது கதவைத்திற… மாமா இப்போது அழுதுருவேன்… அழுது அழுது செத்திருவேன்..” என்றது.

“ நரி மாமா, கதவு சும்மா சாத்தியிருக்கிறது… மாமா தள்ளினால் திறந்து விடும்..” என்று கஜோல் இனிமையாகச் சொன்னபோதே நரி உள்ளே நுழைந்து விட்டது. மூன்று குஞ்சுகளையும் விழுங்கி விட்டது. உண்ட மயக்கத்தில் அங்கேயே படுத்து உறங்கி விட்டது.

கசுமலா காக்கா திரும்பி வந்து பார்த்தவுடனேயே என்ன நடந்ததென்று புரிந்து கொண்டது. உடனே அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்தது. பிறகு நரியை எழுப்பி,

“ நரி மாமாவுக்கு இராத்திரிக்குச் சோறு வேண்டுமா? கோதுமை வேண்டுமா? “ என்று கேட்டது.

கண்களைத் திறக்காமலேயே நரி அடுப்புக்கு அருகிலேயே படுத்திருந்தது.

“ எதுவானாலும் சரி.. கசுமலா காக்கா.. நான் கொஞ்சம் உறங்குகிறேன்..” என்று முணுமுணுத்தது.

கசுமலா கொதிக்கும் வெந்நீரை நரியின் உடலில் ஊற்றியது. நரி வெந்து செத்து விட்டது. நரியின் வயிற்றைக் கீறி மூன்று குஞ்சுகளையும் வெளியில் எடுத்தது

கசுமலா காக்கா குஞ்சுகளுடன் சுகமாக வாழ்ந்தது.

தமிழில் – உதயசங்கர்

Rent the entire collection of famous author Udhayasankar novels online
நன்றி: பறயாம் நமுக்கு கதகள்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *