Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம் : கதா காலம் – தேவகாந்தன்

எனக்கு மிகவும் பிடித்த ஒரு வகைமை புராண மறுவாசிப்பு. எனினும் தமிழில் மறுவாசிப்புகள் அதிகம் கிடையாது. எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி, அகலிகை முதலிய அழகிகள் தொகுப்பு, அருணனின் பூருவம்சம், எஸ்.ராவின் உப்பாண்டவம், ப.ஜீவகாருண்யனின் கிருஷ்ணன் என்றொரு மானுடன் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய படைப்புகள் தான் இந்த வகைமையில் வந்துள்ளன. அப்படியான படைப்புகளில் ஒன்று தேவகாந்தனின் கதா காலம்.

எல்லா மறுவாசிப்புகளையும் போலவே இதுவும் மகாபாரத மறுவாசிப்புதான். பொதுவாக மறுவாசிப்பு என்றால், இதிகாசத்தின் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வது, அல்லது ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்வது. அதை மறுவாசிப்பிற்கு உட்படுத்தி எழுதுவது என்பது தான் வழக்கம். ஆனால், தேவகாந்தன் இந்த நாவலில் மகாபாரதம் முழுவதையுமே மறுவாசிப்பாக எழுதியுள்ளார். அதுவும் 152 பக்கத்தில். பெரிய சாதனைதான்.

Image

எழுத்தாளர் தேவகாந்தன்

நாவலின் அற்புதமான மயக்கும் மொழியில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கதைசொல்லிகள் மக்களுக்கு வாய்மொழியாக பாரதக் கதையைச் சொல்வது போல் தொடர்ச்சியாகச் சொல்லிச் செல்கிறார். மூலக்கதையை முழுவதுமாக அறிந்தவர்களால் மிகவும் ரசிக்க முடியும். எனினும் மற்றவர்களுக்கும் புரியும். தெரிந்த கதை என்பதால் கதை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை மிகவும் கவர்ந்த தேவகாந்தனின் மொழியில் நாவலில் நான் அடிக்கோடிட்டு வைத்திருக்கும் ஓரிரு வரிகளை மட்டும் இங்கே தருகிறேன்.

“மகனின் இளமையைக் கொண்டு காம இச்சைகளைத் தணிக்க ஓடிவந்த யயாதியை, சர்மிஷ்டை யாராக உணர்ந்திருப்பாள்? பெரியன்னையாகிய தேவயானிகூட எவராய்ப் பாவித்திருத்தல் கூடும்?“
“வாக்கு என்பது வெறும் ஒலித்திரளாக மட்டும் நிற்பதில்லை. அதுவே சத்தியம்.“
“அத்தினாபுர அரண்மனை பல பெண் இதயங்கள் வெளிப்படுத்திய துக்கங்களதும், விரகங்களதும், கோபங்களதும் குமுறும் நிலைக்களனாயே காலகாத்துக்கும் இருந்து வந்திருக்கிறது. ஒருபோது சத்தியவதி, அம்பிகா, அம்பாலிகா, பின்னாள் காந்தாரி, குந்தி. அதன் பிறகு துரியோதன்ன் மனைவி பானுமதி.“

“பூவுலகில் பொய் பிந்தித் தோன்றியதில்லை. அதன் ஜன்னம் உண்மை பிறந்த அதே கணத்திலேயே நிகழ்ந்த்து. அநீதி, நீதியின் முன்னதாக்க் கூடத் தோற்றம் பெற்றிருக்க்க் கூடும். கொடுமையும், கருணையும் ஒரு செப்புக்காசின் இரு புறங்கள் போல் ஒருபுறம் மனித அடையாளமாகவும், மறுபுறம் சமூகத்தின் அவசியமாகவும்.”
கொடுமை, கருணை பற்றிய இந்த ஒரு வரி போதும் எனக்கு.

நூல் விபரம் –
கதா காலம்
தேவகாந்தன்
நற்றிணை பதிப்பகம் விலை ரூ.125.00

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

2 COMMENTS

  1. பொதுநலன் கருதி இதை எழுதியவர் பெயரைக் குறிப்பிடலாமே?

  2. I really liked this post! Nice article I visit your blog often and
    you’re always coming up with some great stuff. I posted
    this on my FB page and my followers loved it! Keep up the good
    work. 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here