காதல் பித்து கவிதை – சரவிபி ரோசிசந்திரா

காதல் பித்து கவிதை – சரவிபி ரோசிசந்திரா




உன்னிடம் பேசி
பல மாதங்கள் ஆயின
ஆனால்
நான் இன்னும்
பேசிக்கொண்டு தான்
இருக்கிறேன்,
வெட்டவெளியில்….
உன்னைக் காணாமலும்
பார்வையை
இழக்காமல் தான்
இருக்கிறேன்,
புதிய பார்வையில்….
நீ நடந்து வந்த பாதையில்
கடந்தும் கூட
தடு(ட)மாறாமல் தான் நடக்கிறேன்,
கொடுத்த வாக்கால்….
உன் அலைபேசி எண்ணை
நாள்தோறும் சுழற்றும் கைகள்
இன்னும் இழக்காமல் தான் இருக்கிறது,
தன் சுயத்தை….
நீயின்றி நான் இல்லை
என்று நாம் சொன்னது
பொய்யானது எனப் பலர் ஏசுவது
என் காதிலும் விழுகிறது…
கடந்த சில மாதங்களில் அரங்கேறிய பிரிவில்
நீயும் இருக்கிறாய்
நானும் இருக்கிறேன்
ஆனால்,
நமக்குள்
காணாமல் போனது நம் ‌ காதலென
நீயுமா நினைக்கிறாய்?…
காணாமல் தான் போனேன்
உன்னைக் காணாமல்
மனப்பூர்வமாக நான் விலகிச் சென்றது
மற்றவர்களுக்குப் புரியாமல் போகலாம்
உனக்குமா! புரியவில்லை?
மனவறைக்குள் குமுறி அழும் கண்ணீரைத் துடைத்து
என்னை உயிரோடு வாழ வைப்பது
உன் ஆத்மார்த்த நேசமடா!
இதை நீ இன்னுமா? அறியவில்லை…
யார் வேண்டுமானாலும்,
என்னை எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும்,
நீ மட்டும் என்னைப் புரிந்து கொள்வாய் என்று நினைத்தே
காத்திருக்கிறேன் நெடுங்காலம்…
என் காதலை உன் மனம்

புரிந்து கொள்ளுமா?
இல்லை பிரிந்து செல்லுமா!

-சரவிபி ரோசிசந்திரா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 4 Comments

4 Comments

  1. Jenny Vinotha

    காதலை படிக்க வைத்தது…,👍

    • சரவிபி ரோசிசந்திரா

      நன்றியும் மகிழ்வும் தோழி

    • சரவிபி ரோசிசந்திரா

      நன்றியும் மகிழ்வும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *