போரற்ற உலகம்
********************
சமாதானமாக மனம் சொல்கிறது ..
போரற்ற உலகம்
நாட்டின் பெருமை
அணு சோதனைகள் நடத்தும்ம
நாடுகளில்..
யுத்தத்தின் சத்தங்கள்
காதில் ஒலிக்கத் துவங்கிவிட்டன..
குண்டுகளின் சப்தத்தில்
கண்விழிக்கும்
கனவுகள் சிதறுகின்றன.
உலகம் உருண்டை தானே!
அன்பில் விடிந்தால்..
பகைமை விலகும்.
அன்பை விதைத்தால்..
மானுடம் விடியும்.
மானுட உன்னதம்
********************
கரு உரு பெற்று
பிறந்த குழந்தை கற்றுத் தருகிறது
மானுட உண்மையை…
மழலையுடன் பழகிப் பாருங்கள்
மகிழ்ச்சியில் மனம் திளைக்கும்…
இந்த நொடி வாழ்க்கையை
வாழ்ந்து உணர்த்துகிறது பிஞ்சுகள்..
இயற்கையிடம் சரணாகதியாகும்
மனதில் அன்பு உதிக்கிறது..
அன்பின் வழி நடக்கிறபோது
மானுட உன்னதம் மலர்கிறது.
– கவிதா பிருத்வி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

