பண வீக்கமெனும் பூ!!
******************************
பனி உறைவதைப் போல்
மனம் இறுகி உறைகிறது
ஒவ்வொரு இரவும்
ஒரு பூவாய் மலரும்
ஒவ்வொரு பூவும்
உதிரும் தினமும்
கடலொரு பூ
அதன் பூக்காம்புதான்
எங்கே?
இந்தக் கடலை
காற்றில் சிலுப்பிக் காட்டுகிறது…
உணவுப் பொட்டலம்
கொடுக்கும் கைகளைப் பற்றி
முத்தமிடும் நேரம்
சிந்தும் கண்ணீர் துளிதானே
உலகின் மீப்பெரிய ஆசிர்வாதம்?
கிணறு வெட்டுகிறார்கள்
இன்னும் நீர் வரவில்லை
நீர் வரும் ஊற்று
இன்னும் தென்படவில்லை
வானம் பார்த்துக் கொண்டேயிருக்கிறது
“இன்னும் கொஞ்சம் தோண்டுங்கள்
இன்னும் கொஞ்சம் தோண்டுங்கள்”
என்று டார்ச் அடிக்கிறது…
மழை குதித்து விளையாடவொரு
அழகிய கிணறு
எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம்…
குமரகுரு
9840921017
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.