உறவுக்குப் பொருள்?
*************************
என் கண்கள்
தொடும் வரைதான்
வானத்தின் எல்லை!

என் கண்களுக்குத்
தெரியாதப் பகுதி
கடலன்று;
அது ஏதோ ஒன்றுதான்!

காற்று
உயிரற்றப் பின்பும்
என் பிணத்தையும்
சூழ்ந்திருக்கும்!

மண்
என்னை விடுவதும் இல்லை;
நான்
மண்ணை விடுவதும் இல்லை;
உயிருடனும், உயிரற்றப் பின்பும்!

என் பிணத்தை ருசிக்கும்
நெருப்பைக் கண்டு
என் உடல் அஞ்சுவதில்லை!

உறவுக்குப் பொருள்?
பொருள்தான்!

-பாங்கைத் தமிழன்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *