தெறிப்புகள்
நினைவுகளின் கடைசி ஏணிப்படியில்
நான் ஏறி நின்ற போது
இரவு விடிந்திருந்தது
ஒரு முள்ளைப்போல
தனிமை கீறும் இடங்களில் துளிர்ப்பது
குருதியின் சிறு துளி அல்ல
வலியின் பெருங்கடல்
ஒரு மணிக்கு 3600 விநாடிகள் என்பதை
நீ அருகில் இல்லாத
இந்த இரவில் தான்
கண்டு கொள்கிறேன்
இந்த நிலவு தானே
அங்கேயும் இப்போது
அது உன் கழுத்துக்கு இடதுபுறமா
வலது புறமா என்று
கொஞ்சம் பார்த்துச் சொல்
இந்த தனிமையின் சுரத்தை
தாண்டுவதற்குள்
எத்தனை கடும் கோடைகளையும்
எத்தனைக் கொடும் காடுகளையும்
தாண்டி வர வேண்டியதிருக்கிறது
தங்கேஸ்
தமுஎகச
சின்னமனூர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

