Subscribe

Thamizhbooks ad

கவிதை : இனி பெண்மை – சாந்தி சரவணன்

அகராதியில் அழிந்தது பெண் சிசுக் கொலை
அகழ்வாராய்ச்சியில் பெண் நடுகற்கள் எதிர்காலத்தில் கிடைக்காது
திரெளபதியும், சீதையும் வருங்கால இதிகாசத்தில் இடம் பெறமாட்டார்கள்
கிருஷ்ணனுக்கும் ஆஞ்சநேயருக்கும் இனி வேலையில்லை
வால்மீகியும், கம்பனும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பர்
ஆசிபா கொடுமை இனி புவியில் இல்லை
மழலையர் மலராக மகிழ்ந்து புன்னகையுடன்  மலர்வார்கள்
மனுதர்மம் மருவி மாந்தர்  தர்மம் ஆனது
பாட சாலை மானுடம் பயிலும் பொதுவுடமையானது

வருமானம் ஈட்டி, சுயசிந்தனையோடு  வளர்ந்தாள் பெண்
விமர்சனங்களை விதைகளாக்கி விருட்சமாக வளர்ந்தாள் பெண்
பெண்கள் சுதந்திரமாக அச்சமின்றி பாதுகாப்பாக பயணித்தார்கள்
பெண் உயர்வே குடும்ப உயர்வென  சமூகம் உணர்ந்தது
நாட்டை திறம்பட ஆளுமையுடன் ஆண்டாள் பெண்
இறக்கை முளைத்து வானத்தில் பறந்தாள் பெண்
புனிதபடுத்தி உயிரற்ற சிலையாக்கும் சமூகம் மடிந்தது
உயிருள்ள மனுஷியாக பார்க்கும் சமூகம் உருவானது.
பாரதியார், பெரியார் கண்ட  கனவு மெய்ப்பட்டது
பூமாதேவி இன்று பிரபஞ்ச தேவி ஆனாள்

தடைகள் தகர்ந்து ஏற்றங்கள் வானமெட்டியது
இனி வரும் காலமெல்லாம் கொண்டாட்டம் தான்
இறைவியே  உனக்கு நிகர் இனி யாருமில்லை
சிலாகித்து பிரபஞ்சத்தில் மகிழ்ந்து வாழ் மாந்தரே!
வையத்தை ஆண்டு வளமுடன் நீவிர் வாழ்க!

Latest

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ....

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம்...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ. 100 வணக்கம், எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் முதல் குறுநாவலுக்கு மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை...

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க இருக்கிறேதே. இப்போது உங்கள் குழந்தையின் வயது...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here