வீட்டின் முன் கரைந்து கொண்டிருந்த காகத்திற்கு
கொஞ்சம் உணவு வைத்தேன்
இன்னும் சில தினங்களில் மழை
என்பதை உணர்ந்த காகம்
உணவை விடுத்து
சில குச்சிகளை
மட்டும் எடுத்து கொண்டு
கிளைக்கு திரும்பியது ..
மரத்தில் புதிதாக
கூட்டை கட்டிகொண்டிருந்த காகம்
கூ(வீ)ட்டின் அவசியத்தை
உணர்த்தி சென்றது ..
எளிதில் கிடைத்து விட்டது
காகத்திற்கு
சுள்ளியும் இலவம்பஞ்சும்
ஏதும் கிடைக்காமல் பிழைக்கும்
ஏழை என்ன செய்வான் இனி …

