இன்று உலகை உலுக்கியவன்
எப்போதோ தூசு படலமாக இருந்தவன்
மண்டையில் விழுந்த
ஆப்பிள் ஒன்றினால் தான்
நியூட்டன் அறியப்பட்டான்
“முடியுமா” என்பது
கோபுர அஸ்திவாரத்தில்
இடப்பட்ட கடப்பாரை
“முடியாது” என்பது
சிந்திக்க தெரியாதவனின்
வாழ்வியல் கோட்பாடு
உன்னை தின்னும் கவலைகளை
பிய்த்து எடுத்து வளி மண்டலத்துக்கு அப்பால்
வீசி எறிந்து போ
இனியும் உன் நிழலை தேடாதே
உன் நிழலில் ஊரே வாழட்டும்
மகிழ்வாய் மட்டும் இரு
வாழ்க்கை ஒரு முறை மட்டுமே…

