Subscribe

Thamizhbooks ad

கவிதை: பறக்கத்தான் ஆசை -கவிஞர் ம.செல்லமுத்து 

பறக்கத்தான் ஆசை!!!

பறக்கத்தான் ஆசை
வானில் மட்டுமல்ல வையகத்திலும்!!
வலி அறிய வாழ்க்கையில் விழி அறிய..!!

எதற்கும் ஓர் விலை உண்டு
இப் பிரபஞ்சத்தில் ..!!

மனிதனால் சூழப்பட்டது
மனிதனுக்கே நிலைப்பட்டது..!!

ஒவ்வொரு விடையும் தடையாகவே!
ஒவ்வொரு தேடலும் கனவாகவே!!
ஒவ்வொரு விதியும் வினையாகவே!!
ஒவ்வொரு பயணமும் விபத்தாகவே!!
ஒவ்வொருவர் கனவும் பயமாகவே!!!

மாறுதல்களும் மாற்றங்களும்
இப்படி ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் பல சூழ்நிலையில் ..!!

நினைவுகளில் எண்ணங்களின் ஓட்டம் ஒரு ஓரமாக!!

முடங்கிப் போன முட்களும் மீண்டும் துளிர் விடுமா!!

வலியில்லா வாழ்க்கையில் வாழ்வது பாரமா!!

பூட்டிய அறைக்குள் புத்தனாக ஒவ்வொரு மனிதர் மனதும்!!

கலங்குதே காலத்தில் காயப்பட்டு..!!

நொடிப்பொழுதும் நோயாகிப் போனதே ..காலத்தில் ..!!

உழைக்க மறந்த மனம் நினைக்குதே தினம் தினம் ..!!

விழி மேல் நெருப்பு ஒன்று அருகினில் வாடுதே …!!
படுக்கையும் பாய் மரம் போல் கடக்குதே …!!

எதிர்த்து நின்று போராடித் தன் கை நம்பிக்கை ..!!

வெற்றி தோல்வி அனுபவங்கள்
நம்முடன் தினம் பயணிக்கும் பறவை
வசப்பட்டே தீரும்
வானம் வெகு அருகில்….

 

கவிஞர் ம.செல்லமுத்து
எம்.ஏ..பி எட் …
நூத்தப்பூர் அஞ்சல்
 பெரம்பலூர் மாவட்டம்

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here