நானொரு பறவை
நீங்கள்
எவ்வளவு தூரம்
வேண்டுமானாலும்
என்னை தூக்கியெறியுங்கள்
நான் காற்றோடு காற்றாகவே
பறந்து வருவேன்
உங்கள் கிளைகளை
பற்றிக்கொண்டு
சிறிது நேரம் இளைப்பாற…
ஒரு செடியை
பார்க்கிற பொழுது
என் பார்வைகள்
அங்கு ஆயிரம்
ஆயிரம் பூக்களாகவே
பூக்க ஆரம்பிக்கின்றன
அதில் ஒரு
வண்ணத்துப்பூச்சியாகவே
வந்து அமர்கிறது
சில கனவுகள்…

